பக்கம் எண் :

159

   
 

அதி. 31-பிழை பொறுத்தல்

 

நின்போற் பிறர் செய்யிற் சினப்பது நெறியோ

339
எப்பிழைக்கா நீபிறரைச் சினந்தவர்க்கின்
    னாவியற் றவெண்ணி னாயோ
அப்பிழைநீ செய்திலையோ வுன்னைப்போ
   லவர்பிழைக்க லாகா தோமா
வெப்பமுற நாணிலையோ நீயொருவன்
   பிழைபுரிய விண்வேந் தன்கை
ஒப்பமுட னதிகாரம் பெற்றனையோ
   மனமேநீ யுரைசெய் வாயே.
 

நெஞ்சே! நீ பிறரை எப்பிழையின் பொருட்டுச் சினந்து அவர்க்குத் துன்பஞ் செய்யவேண்டுமென்று எண்ணுகின்றாயோ, அப்பிழையை நீ செய்ததில்லையா? உன்னைப்போன்று அறியாமையால் அவர் பிழை செய்தல் ஆகாதா? மிகுந்த சினங்கொள்ள உனக்கு வெட்கம் இல்லையா? நீ யொருவன் மட்டும் பிழைசெய்ய மேலுலக மன்னர் மன்னன் கைச்சாத்து உரிமை பெற்றிருக்கின்றாயோ? சொல்வாயாக.

  மா-மிக்க. வெப்பம்-சினம். நாண்-வெட்கம். வேந்தன்-மன்னர் மன்னன்; சக்கரவர்த்தி. கையொப்பம்-கைச்சாத்து. அதிகாரம்-உரிமை.
 

1

 

ஒப்பில்லாக் கடவுள் ஒருவனே பிழையிலான்

340
பிழையிலான் கடவுளன்றி மக்களில்தப்
    பில்லாதார் பிறரு முண்டோ
மழையினுமே அசனியுண்டு மதிக்குமோர்
    மறுவுண்டு மலர்க்கு முள்ளாம்
கழையினுமே சக்கையுண்டு கனியினுந்தோல்
    கொட்டையுண்டு கதிக்குங் காம
விழைவினான் மறம்புரிதல் நரர்க்கியல்பா
    தலினவரை வெறுக்கொண் ணாதே.
 

கடவுள் ஒருவரே குற்றம் இல்லாதவர். மக்களில் குற்றம் இல்லாதவர் இலர். மழைக்கு இடியாகிய குற்றமுண்டு. திங்கட்கு