பக்கம் எண் :

160

  நீதிநூல்
 
 

மறு இருக்கின்றது. மலருக்கு முள்ளிருக்கின்றது. கரும்புக்குச் சக்கை இருக்கின்றது. இனிய தீம்பழத்துக்கும் தோலும் கொட்டையும் உண்டு. மிகுந்த இன்ப ஆசையால் தீமைசெய்தல் மக்கட்கு இயல்பு. ஆதலால் அவரைத் தீயோர் என்று வெறுத்தல் ஆகாது.

 

அசனி-இடி. கழை-கரும்பு. கதிக்கும்-மிகும். காமம்-இன்பம். மறம்-தீமை. நரர்-மக்கள். வெறுப்பு-விருப்பமின்மை.

 

2

 

குற்றத்தைப் பொறுத்தல் அறிவோர் குணமே

341
நாவையே கடித்ததெனப் பல்தகர்க்கும்
   பேருளரோ நடக்கும் வேளை
பூவையே பொருவுகழல் சருக்கியதென்
   றதைக்களை வோர்புவியி லுண்டோ
காவையா ருலகமெனும் பேருடலி
   னவயவம் போல்கலந்த சீவர்
தாவையே செய்யினுமிக் கறிவுடையோர்
   கமைசெய்தல் தகுதி யாமால்.
 

பல் நாக்கைக் கடித்துவிட்டதென்று அதனை உடைப்பவர் இல்லை. பூப்போன்ற கழலணிந்த அடி நடக்கும்போது வழுவிவிட்டதென்று அதனை வெட்டுவார் இலர். சோலைகள் சூழ்ந்த உலகமாகிய பெரிய உடம்பினுக்கு உறுப்புப்போல் கூடியுறையும் மக்கள் குற்றம் செய்யினும் சிறந்த அறிவுடையார் பொறுத்தல் முறைமையாகும்.

  தகர்த்தல்-உடைத்தல். சருக்கல்-வழுவுதல். கா-சோலை. கமை-பொறுமை. வேளை-பொழுது.
 

3

 

இகழ்ந்தார் தமக்கும் இனியவே இயற்றுக

342
உனையொருவ ரிகழ்ந்தனரே லேதுக்கா
    விகழ்ந்தனரென் றுன்னி யுன்பால்
தினையளவு தப்புளதே லதைநீக்காய்
   தப்பின்றேற் சினமு றாதே
கனைகழையை வேம்பென்னிற் கழைக்குமோர்
   குறையுண்டோ கல்லின் மோதித்
தனையுடைப்போர்க் குணவுதரும் தேங்காய்போ
   லெவர்க்குநன்மை தனைச்செய் நெஞ்சே.