| நீதிநூல் |
| மரமுதலிய அசைவால் காற்றும், புகையால் தீயும், மணத்தால் பூவும் உண்டு என மதிப்பர்; அதுபோல் உலகத்தால் கடவுள் உண்மை பெறப்படும். |
| வீ-பூ.பரன்-கடவுள். |
| 3 |
10 | நாதனில் லாத வீடு நாளுமே நடவா தென்னில் வேதநா யகனி லானேல் விரிகதிர் மீனு தித்தல் சீதநீர் பெயல்தருக்கள் சீவரா சிகள்க தித்தல் பூதபௌ தீக மெல்லாம் புரையற ஒழுகற் பாற்றோ.
|
|
| தலைவன் இல்லாத வீடு நடவாமைபோலக், கடவுளில்லாத உலகமும், உலகத்து ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியன தோன்றலும், மழைபெய்தலும், உயிர்கள் வாழ்தலும் நிகழமாட்டா. |
| பூதபௌதீகம்-உலகமும் அதனாலாம் செயற்கையும். |
| 4 |
11 | பூதம்யா வுக்கும் ஏணாய்ப் பொருந்திய விசும்பைக் காற்றை வேதனூ லதனை மண்ணோர் மெய்யுரை யுயிரை நெஞ்சை ஏதமிலறத்தைக்கண்ணாற் பார்த்திலோ மெனினுமுண்டென்று ஓதல்போல் தெய்வந்தானொன் றுளதெனல் தேற்ற மம்மா. |
|
| நீலம், நீர், தீ முதலிய பூதங்களுக்கு ஆதராமாய் உள்ள காற்றை, வானத்தை, அறிவை, உயிரை, அறத்தைக் கண்ணால் பார்ப்பதில்லை. ஆனால் உண்டென்று ஒப்புக்கொள்கின்றோம். அதுபோன்று தெய்வம் உண்டென்பதும் தெளிவு. |
| வேதநூல்-அறிவு.ஏண்-ஆதாரம். |
| 5 |
12 | வாசமூக் கறியுமன்றி வாய்செவி விழிமெய் தேரா பேசவாய் அறியு மன்றிப் பின்னையோர் புலன்றே ராது நேசமார் தொண்டர் ஞான நேத்திரங் கொண்டு காணும் ஈசனை முகத்தில் கண்ணால் இகத்தில்யார் காண வல்லார். |
|
| மணத்தை மூக்கறியுமே அல்லாமல் காது முதலிய ஏனைப் புலன்கள் அறியா. பேச வாய் அறியும், மற்றது அறியாது. அதுபோலக் கடவுளை மெய்யன்பர்கள் ஞானக்கண் கொண்டு காண்பர். அப்படியிருக்க உலகத்தில் யாவர் முகக்கண்ணால்காண்பர்? |
| வாசகம்-மணம். இகம்-உலகம். |
| 6 |