| தெய்வமுண்டெனல் |
13 | வானின்றி மழையு மில்லை வயலின்றி விளைவு மில்லை ஆனின்றி கன்றுமில்லை அரியின்றி யொளியு மில்லை கோனின்றிக் காவ லில்லை குமரர்தா யின்றியில்லை மேனின்ற கடவு ளின்றி மேதினி யில்லை மாதோ. |
|
| மேகம் இல்லாமல் மழை இல்லை; வயல் இல்லாமல் விளைவு இல்லை; பசு இல்லாமல் கன்றில்லை; ஞாயிறு இல்லாமல் வெளிச்சமில்லை; அரசனில்லாமல் காவலில்லை. தாயில்லாமல் மக்களில்லை. இவைபோலக் கடவுளில்லாமல் உலகமில்லை. |
| அரி-ஞாயிறு. ஒளி-வெளிச்சம். |
| 7 |
14 | கதிரவற் கொளியின் றென்னக் கண்ணிலார் கழறல் போலும் வதிரர்பே ராழி யோசை மாறிய தென்னல் போலும் எதிருறு பொருளைக் காணா திடருறு பித்தர் போலும் மதியிலார் தேவின் றென்ன மருளொடும் இயம்பு வாரே. |
|
| குருடர் ஞாயிற்றுக்கு ஒளியில்லை என்பதையும், செவிடர் கடலுக்கு ஓசையில்லை என்பதையும், பித்தர் எதிரிலுள்ள பொருளறியாது துன்புறுவதையும் ஒக்கும், அறிவிலார் கடவுளில்லை யென்று மயங்கிக் கூறுதல். |
| வதிரர்-செவிடர். ஆழி-கடல். தேவு-கடவுள். |
| 8 |
15 | அத்தன்தாய் முன்னோர் தம்மை யறிகிலா னிலரென் பானோ சத்தமின் சுவைகந் தத்தைத் தரிசியா னிலனென் பானோ நித்தனைக் கண்ணிற் காணா நீர்மையா லிலனென் றோதும் பித்தரிற் பித்தர் பாரில் பேசிட வுளரோ அம்மா. |
|
| தந்தைதாய் முன்னோரை அறியாதவன் அவர்களை இல்லையென்று சொல்ல முடியுமோ? ஓசை, சுவை, மணம் இவற்றைக் கண்ணிற் காணாமையால் இல்லை யென்று சொல்ல முடியுமா? இவை போன்றே கடவுளை நேரிற் காணாமையால் இல்லை யென்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வோர் பெரும்பித்தர் ஆவர். |
| அத்தன்-தந்தை. நித்தன்-கடவுள். |
| 9 |
| நீ.-2 |