பக்கம் எண் :

18

 நீதிநூல்
 
16
தேவனே யிலனேல் மோக்கந் தீநர கில்லை வேதம்
பாவபுண் ணியங்க ளில்லை பரனிலை யென்போ னில்லின்
மேவலர் தீயிட் டன்னான் விபவமெல் லாஞ்சி தைத்துச்
சீவனை வதைசெய் தாலென் செய்குவன் சிதடன் றானே
  கடவுளில்லாவிடின் வீடில்லை; நரகமில்லை; கடவுள் நூல் இல்லை. பாவபுண்ணியங்க ளில்லை, என்று சொல்லித்திரிவோன் வீட்டில் தீவைத்தும் அவன் செல்வத்தைக் கொள்ளையிட்டும் அவனைக் கொன்றும் கொடுமை செய்தால் அவ்வறி வில்லாதவன் என்ன செய்வான்.
  இல்-வீடு. விபவம்-செல்வம். சிதடன்-அறிவில்லாதவன்.
 

10

   
  அதி. 2. தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
  பிறப்பு இறப்பு இல்லாப் பெரியோனை வாழ்த்து
17
ஆதியீ றில்லான் றன்னை யமைத்தகா
    ரணமொன் றில்லான்
கோதிலான் கணத்து ளண்டங் கோடிசெய்
    தழிக்க வல்லான்
ஓதிடு மொப்பொன் றில்லான் உருவிலான்
    இருவிண் டங்குஞ்
சோதிதன் னிழலாக் கொண்ட சோதியைத்
    துதியாய் நெஞ்சே.
  முதலும் முடிவும் இல்லாதவன்; தன்னை உண்டாக்கிய ஒரு காரணப்பொரு ளில்லாதவன்; குற்றமில்லாதவன்; நொடிப் பொழுதினுள் திருவுள்ளத்தால் அளவிலாத அண்டங்களைப் படைத்து ஒடுக்கும்வலிமையுள்ளவன்; ஒப்பில்லாதவன்; உருவில்லாதவன்; பரவெளியில் தங்கும் பேரொளியானவன். ஒளி நிழலானவன். அவனை நெஞ்சே வணங்கு.
 கோது-குற்றம். கணம்-நொடி. விண்டு-நீங்கி.
 

1