| தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| காணரும் வடிவினன் கடவுள் |
18 | ஆணலன் பெண்ணு மல்லன் அஃறிணை யலன்பா ரல்லன் சேணலன் புனல்தா லல்லன் தீயலன் ஐம்பு லத்தால் காணரும் வடிவ னித்தன் கத்தனம் மத்தன் சுத்தன் மாணற முருக்கொண்டன்ன மாட்சியான் கடவுணெஞ்சே. |
|
| சிறந்த அறமே உருக்கொண்டனைய மாண்பினவன் கடவுள், அவனே தூயா தலைவனும் தந்தையும் ஆவன். ஆனால் ஆண், பெண், உயிர், மண், விண் முதலிய பூதம், அவன் அல்லன். |
| 2 |
| எப்பொருளினும் நீக்கமின்றி நிற்போன் இறைவன் |
19 | தரையெலா முளன்து ரும்பு தன்னினு முளனண் டாண்ட நிரையெலா முளன்மெய் யாவி நெஞ்சுளு முளனி யம்பும் உரையெலா முளன்தான் மேவி யுறைபொருள் கெடக் கெடாதான் புரைதபு தன்னைத் தானே பொருவுவோ னொருவ னன்றே. |
|
| தனக்குத்தானே ஒப்பாகிய கடவுள், தரை, துரும்பு, பல உலகங்கள், உயிர், நெஞ்சம், சொல் முதலிய எல்லாவற்றோடும் கலந்து நிற்கின்றான். அப்படி நிற்பினும் அப்பொருள் கெடுங்காலத்துத் தனக்குக் கேடின்றித் தனித்து நிற்பன். |
| வதிரர்-செவிடர். ஆழி-கடல். தேவு-கடவுள். |
| 3 |
| உலகியல் விதித்தோன் கடவுள் |
20 | உடுக்கணம் யாவும் வெவ்வே றுதயனா மொவ்வொன் றிற்கும் நடுக்கட்பூ வலயஞ் சோம நபமொடும் வரம்பில் கோடி அடுக்கடுக் காச்செய் தெல்லா மந்தரத் தமைந்து நிற்க இடுக்கணொன் றின்றிக் காக்கும் எம்பிரான் பெரியனன்றோ. |
|
| விண்மீன்கள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சூரியனாம். ஒவ்வொன்றுக்கும் உலகம், திங்கள், வானம் முதலியனவாகப் பலகோடி உலகங்க ளுண்டு. அவற்றை வெளியில் அமைத்துக் கேடில்லாமல் காப்பவன் கடவுள். |
| நபம்-வானம். |
| 4 |