பக்கம் எண் :

20

 நீதிநூல்
 
  முட்டியுல கழியாது முடிப்பவன் கடவுள்
21
பண்ணிய புவன மெல்லாம் படர்கையிற்
   பரிக்கும் ஏகன்
நண்ணிய கரஞ்சற் றோயின் நழீஇயொன்
   றோடொன் றுமோதித்
திண்ணிய வகில கோடி சிதைந்துகு
   மெனவ றிந்தும்
புண்ணிய மனுவால் தேவைப்போற்றிடா
   வாறென் னெஞ்சே.
  உலகங்கள் எல்லாவற்றையும் கையில் வைத்துக் காக்கும் தனிமுதற் கடவுள்; திருக்கைசற்று ஓய்ந்தால், உலகங்கள் நழுவி அழிந்துபோம். இவ்வுண்மையை உணர்ந்து ஒப்பில்லாத கடவுளைத் தூயதமிழ் மந்திரத்தால் நெஞ்சமே தொழு.
  நழீஇ-நழுவி.
 

5

 அடிமுடி எவர்க்கும் அறியொணான் கடவுள்
22
இதயந்தன் வேகத் தோடு மெண்ணிலவ்
   வியத்த காலங்
கதமொடு மீச்சென் றாலுங் கடவுண்
   மெய்ந் நடுவையன்றி
யிதரவங் கத்தைக் காணா தெனின்முடி
   யெவண்பொன் னொக்கும்
பதமெவ ணகண்டா காரப் பராபரற்
   குரையீர் பாரீர்.
  மனம் தன் முழு விசையோடும் அளவிடப்படாத பேரெண் உள்ள காலமெல்லாம் ஓடினாலும் தெய்வத் திருவுருவின் நடுவினையே காணமுடியும். ஆதலால், எல்லாம் ஆய இறைவனுக்கு முடியும் அடியும் எவ்விடத்தன என்று காணமுடியாது.
 அவ்வியம்-பேரெண். அண்டாகாரம்-அளவிலா வடிவம்.
 

6