பக்கம் எண் :

164

 நீதிநூல் 
 
 

எல்லாக் கேட்டையும் தருவ திழிசொல்

348
இக்குவல யக்கணிழி வுக்கிடம தாகும்
பக்கரொடு மக்கள்பகை புக்கவழி பண்ணும்
துக்கமும் விளைக்குமொரு துக்கமும் விளைக்குங்
குக்கனை நிகர்க்குமவர் கக்குமிழி கூற்றே.
 

நாயை ஒப்பவர் சொல்லும் அருவருக்கத்தகுந்த இழிசொல் இவ்வுலகத்தில் இழிவுக்கிடந்தரும். இனத்தாரையும் மக்களையும் பகைவர்களாக்கும். சாவைத் தரும்படியான ஒரு நோயைத் தரும்.

 குவலயம்-உலகம். பக்கர்-இனத்தார். துக்கம்-சாவு. துக்கம்-நோய். குக்கன்-நாய்.
 

2

 

நலம்பொலம் அவரவர் வாய்மொழி நவிலும்

349
சந்தநிறை செப்பிறைவை சாணமுள தென்னக்
கந்தம தெவர்க்குநனி காட்டிவிடல் போலும்
நிந்தனையு ளாரினிய நீர்மையின ரென்ன
முந்தவவர் வாய்மொழி மொழிந்துவிடு மன்றோ.
 

சந்தனம் நிறைந்த செப்பும் சாணம் உள்ள கூடையும் அவ்வவற்றின் மணம் காட்டிவிடுதல் போல, பொல்லாரையும் நல்லாரையும் அவரவர் வாய்மொழியே காட்டிவிடும்.

 சந்தம்-சந்தனம். இறைவை-கூடை. நிந்தனை-பொல்லாங்கு.
 

3

 

இல்லாப் பெயரையும் இயற்றும் வாய்ச்சொல்

350
நன்மைபுரி யார்களு நயந்தவிர் கொடுஞ்சொல்
இன்மையெனி னல்லவ ரெனப்புகழ் படைப்பார்
தின்மைபுரி யார்களும் வழங்குமுரை தீதேல்
புன்மையுறு தீயரென எள்ளுமுயர் பூவே.
 

நன்மை புரியாதவர்களும் கொடுஞ்சொல் கூறாரானால் நல்லவரெனப் புகழ் பெறுவர். தீமை செய்யாதவர்களும் கொடுஞ்சொல் கூறுவாராயின் இழிவான தீயவரென உலகத்தார் இகழுவர்.

 

பூ-உலகம்.

 

4