பக்கம் எண் :

165

 இனியசொற் கூறல்
 
 

கடுஞ்சொற் கூறுவோர் கயவரே யாவர்

351
வன்மொழி யுரைக்கினெதிர் வன்மொழி கிடைக்கும்
இன்மொழி யுரைக்கின்வரு மின்மொழி யெமக்கும்
நன்மொழிக ளேபல விருக்கநவி லாமற்
புன்மொழி யுரைப்பவர்கள் பூரியர்க ளன்றோ.
 

நாம் யாருடனும் வன்மொழி பேசினால் நமக்கும் வன்மொழியே கிடைக்கும். இன்சொல் சொன்னால் இன்சொல்லே கிடைக்கும். நல்ல சொற்கள் பல இருக்க அவற்றைக் கூறாது இழிவான கடுஞ்சொற் கூறுவோர் தாழ்வானவர்கள் ஆவர்.

 பூரியர்-தாழ்வானவர்.
 

5

 

வேறு

அறிவிற் பெரியோர் அனைவரையும் பணிவர்

352
தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர்
காமரம் வளைதல்போல் கலையு ணர்ந்திடு
தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும்
பாமர ரெவரையும் பணிந்தி டார்களே.
 

தேனும் சுவையும் மிகுந்த கனிகள் பல நிறைந்து உயர்ந்து வளரும் சோலைமரங்கள் வளைவது போன்று நிறைந்த கல்வியுணர்வுடையார்-தூய மனமாண்புள்ளார்-எல்லாரையும் தொழுவர். கல்வி அறிவு இல்லாத கீழோர் ஒருவரையும் தொழார்.

 தே-தேன்; இனிமை. கா-சோலை. பாமரர்-அறிவிலாக் கீழோர். பணிதல்-தொழுதல்.
 

6

 

வேறு

 

இருக்கை இன்சொல் வரவேற்பால் எய்துவது அன்பு

353
எதிர்சென்று முகமன் கூறி யிருக்கையும் நல்கி யுண்டே
அதிசய மெனவி னாவி அன்பொடு முகம லர்ந்து
துதிபுரிந் துபச ரிக்கும் தொழிலினாற் செலவொன் றில்லை
அதிர்கடல் உலகு ளோர்தம் அன்பெலாம் வரவா மாதோ.
 

ஒருவரைக் கண்டபொழுது எதிர்சென்று இனிய கூறி அழைத்து வந்து, நல்ல இருக்கையி லமர்வித்துச் சிறப்பு என்ன