| நீதிநூல் |
| என உசாவி அன்புடன் முகமலர்ந்து வாழ்த்தி வரவேற்புச் செய்யும் செயலால் ஒரு செலவும் இல்லை. ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகவருடைய அன்பு முழுவதும் வரவாகும். |
| முகமன்-இன்சொல். இருக்கை-மணை; ஆசனம். அதிசயம்-நன்மை; சிறப்பு. துதி-வாழ்த்து. உபசரிக்கும்-வரவேற்கும். |
| 7 |
| துன்பொழித் தின்பம் சுரக்கும் இன்சொல் |
|
354 | உருமைமின் னினைத்தன் பாற்கொண்டுதகமன் உயிர்க்கு நல்கும் கருமுகி லெனக்கண் ணாலென் காணினும் கேட்பி னுஞ்சூழ் பருவர லேதி லார்க்குப் பயக்கும்வன் சொல்லை நீத்து மருவிய நலங்க லந்த வசனமே பகர்வர் நல்லோர். |
|
| இடியையும் மின்னலையும் தன்னிடம் வைத்துக்கொண்டு நிலைபெற்ற உயிர்களுக்குத் தண்ணீரையே தரும் மேகம்போன்று, அயலவர் பார்வையிலும் கேள்வியிலும் துன்புறும்படியான வன்சொல்லை விலக்கி நன்மை மிக்க இன்சொல்லையே நல்லோர் கூறுவர். |
| உருமை-இடியை. உதகம்-நீர். பருவரல்-துன்பம். |
| 8 |
| உற்றிடத்து நல்லன உரைப்ப தின்சொல் |
355 | நதிமுதல் புகுவ தெல்லாம் நன்ககட் டிடை யடக்கும் அதிர்கட லெனவும் ஈயார் அருத்தமஞ் சிகையே போலும் வதிசெவி நுழைவ தெல்லா மனத்தினு ளடக்கித் தக்க ததியறிந் துரைப்ப தன்றிச் சகலர்க்கு முரையார் மிக்கோர்.. |
|
| அறிவான் மிக்கவர் யாறு முதலிய வந்தவற்றையெல்லாம் தன்பால் வைத்திருக்கும் கடலை யொத்தும், ஈயாதவர் செல்வம் அடங்கியிருக்கும் பணப்பெட்டியை யொத்தும் செவிவழி நுழைந்தவற்றையெல்லாம் மனத்தினுள் அடக்கி நல்லவற்றையே உற்றவிடத்து நல்லவர்க்கு உரைப்பர். எல்லோர்க்கும் உரையார். |
| நதி-யாறு. அகடு-நடுவிடம். மஞ்சிகை-பெட்டி. வதி-வழி. ததி-உற்ற இடம். |
| 9 |
| ------ |