| |
| அதி. 33-பிறர்க்குத் தீங்கு செய்யாமை |
| துன்புசெய்வானையே துன்பம் முதற்கொலும் |
356 | விடதரம் பற்றிவே றொருவன் மேலிடும் அடலுளோன் தன்னைமுன் னதுக டித்தல்போல் இடர்பிறர்க் கிழைத்திடு மியவன் றன்னைமுன் மிடலொடு மவ்விடர் மேவிச் சாடுமே. |
|
| பாம்பைப்பிடித்து வேறொருவன்மேல் இடும் வலிமையுள்ளவனை அப்பாம்பு, முதன் முதலாகக் கடிப்பதுபோல, துன்பம் பிறருக்குச் செய்யும் கீழ்மகனை முதன்முதலாக அத் துன்பம், மிக்க வலிமையொடும் தெறும். |
| விடதரம்-பாம்பு. அடல்-வலிமை. மிடல்-வலிமை. இயவன்-கீழ்மகன். சாடும்-கொல்லும்; தெறும். |
| 1 |
| நற்பண்பு உள்ளாரையே மக்களென நவில்வர் |
|
357 | படியின்மா னிடர்மிகு பண்பு ளோரலாற் கொடியரை நரரெனக் கூறல் பாரெலாம் இடியெனக் கொலைத்தொழி லியற்றுந் திவெடிற் பொடியினை மருந்தெனப் புகல லொக்குமே. |
|
| உலகத்தில் மக்களுக்குரிய நல்ல பண்புள்ளவர்களையே மானிடர் என்று சொல்லுவது. கொடியவர்களை மக்கள் என்று சொல்லுவது, இடிபோன்று கொல்லும் தன்மை வாய்ந்த தீய வெடியுப்புப் பொடியினை உயிரை நிலைக்கச்செய்யும் மருந்து என்று சொல்லுவதனோடு ஒக்கும். |
| மானிடர்-மக்கள். நரர்-மக்கள். வெடில்-வெடியுப்பு. |
| 2 |
| இடர்செய்வான் துன்ப இடையினில் நைவன் |
358 | உரவுநீர்க் கருங்கட லுடுத்த பார்மிசைப் பரர்வருந் திடவிடர் பண்ணு வோன்றனை நரரெலாம் பகைசெய்வர் நண்ணு மாயிரம் அரவுசூழ் கின்றவோர் தேரை யாவனே. |
|
| மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில் பிறர் வருந்தும்படி துன்பம் செய்வோனை மக்கள் எல்லாரும் பகைப்பர். |