பக்கம் எண் :

168

 நீதிநூல்
 
 

அவனும் ஆயிரம் பாம்பின் மத்தியில் அகப்பட்ட தேரைபோன்று வருந்துவன்.

 

உரவுநீர்-கடல்.

 

3

 

வேறு

 

கெடுவான் கேடு நினைப்பான்

359
கயலிற் பாய்சிரல் கால்சிக்கிக் கொண்டெழ
வயமிலா துயிர்மாய் கின்ற தன்மைபோல்
அயல வர்க்கழி வாகவோ ரந்தரஞ்
செயநி னைத்தவர்க் கேவந்து சேருமே.
 

கெண்டைமீனைப் பிடிக்கப் பாய்ந்த சிச்சிலி சேற்றில் கால்சிக்கி எழ வலிமையற்று மாள்வதுபோன்று, பிறர் கெடும்படி ஒரு தீமை செய்ய நினைத்தவர்க்கே அத் தீமை வந்து சேர்ந்து அவர் கெடுவர்.

 கயல்-கெண்டைமீன். சிரல்-சிச்சிலி. வயம்-வலிமை. ரந்தரம்-தீமை.
 

4

 

வேறு

 

தீங்கு செய்வாரைக் காட்டிற்குச் செலுத்துதல் சிறப்பு

360
புயகமதைத் தேள்புலியைப் பொல்லாத விலங்கையெலாம்
அயர்வாக வடித்தோட்டல் அவைகள்குணத் தாலன்றோ
இயல்பின்றி யெந்நாளும் ஏதிலார்க் கிடரிழைக்குங்
கயவனையே வைதடித்துக் கானோட்ட னன்றாமே.
 

பாம்பு தேள் புலி முதலிய கொடிய உயிர்களை மனக்கலக்கத்தோடும் அடித்து விரட்டுதல் அவைகளிடத்துள்ள கொடுந்தன்மையால் அல்லவா? முறையின்றி எந்த நாளும் பிறர்க்குத் துன்பஞ் செய்யும் கீழ்மகனைத் திட்டி அடித்துக் காட்டுக்கு ஓட்டுதல் நல்லதாகும்.

 புயகம்-பாம்பு. அயர்வு-மனக்கவற்சி.
 

5

 

------