| தற்புகழ் |
| மழைப்பயிர் வளம்போல் மன்னும் நற்புகழ் |
374 | நீரினால் பயிர்வளம் நிலைத்தல் போற்குணச் சீரினால் புகழ்ப்பயிர் செழிக்க வேண்டும்நற் பேரிலான் தற்புகழ் பிடித்தி ழுத்தரு மாரியில் பயிரினை வளர்த்தல் மானுமே. |
|
| மழைநீரால் பயிர்வளம் நிலைக்கும். அதுபோல் குணச் சிறப்பால் புகழ் நிலைக்கவேண்டும். நன்மை செய்து நற்பெயர் பெறாதவன் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல், மழையால் செழித்துத் தானே நீண்டு வளர வேண்டிய பயிரைக் கையால் பிடித்து இழுத்து மழையில்லாமல் வளர்க்கத் தொடங்குவதை ஒக்கும். |
| தற்புகழ்-தன்னைத் தானே புகழ்தல். மானும்-ஒக்கும். |
| 4 |
| நல்லொ ழுக்கமே நற்புகழ் பெறும்வழி |
|
375 | தற்புகழ் வோன்றனைப் பழிக்கும் தாரணி சொற்புகழ் விரும்பிடான் தனைத்து தித்திடும் நற்புகழ் பெறுவழி நன்ன டக்கையோடு அற்பமுந் தற்புக ழாமை யாகுமே. |
|
| தன்னைத்தானே புகழ்பவனை உலகோர் பழிப்பர். தன் புகழைப் பிறர் கூறக் கேட்கவும் விரும்பாதவனை உலகோர் போற்றுவர். நல்ல புகழைப் பெறும் வழி நன்மை செய்தலும் சிறிதும் தற்புகழாமையுமாம். |
| அற்பமும்-சிறிதும். |
| 5 |
| வேறு |
| தன்னை நெடிதாக்கத் தான் தூக்கல் தற்புகழ்தல் |
376 | துதிபெற ஆதர மிகலாலே தூயவ ராகுவர் கலைதேறி மதியினர் ஆகுவர் அரிபோல வலியின ராகுவ ரேயேனும் அதிதுதி பிறர்சொலின் அழகாகும் அமைவொடு தனதுதி தான்கூறல் கதிதன துடலுயர் வுறவேதன் கைகொடு தூக்கிட வுனல்போலும். |
|