| நீதிநூல் |
| நற்புகழ் பெறவேண்டும் என்னும் பெருநசையுள்ளவர் உண்மை யொழுக்கத்தால் தூய்மை எய்துவர். கற்றறிவல்ல ஒண்மையராவர். அரிமாவையொத்த வலிமை யுடையவராயினும் தம் புகழ் பிறரால் சொல்லப்படுவதே அழகு. தாமே சொல்லுதல் தம்முடல் நெடிமை என்று காட்டத் தம் கையாலேயே தம்முடலைத் தூக்க நினைப்பதையே ஒக்கும். |
| அரிமா-சிங்கம். |
| 6 |
| தன்னைத்தான் புகழில் இகழ்வே சாரும் |
|
377 | சடமதைக் கழுவ வுன்னிச் சகதியிற் றோய்தல் போலும் சுடரினைத் தூண்ட வேண்டி யூதியே தொலைத்தல் போலும் மடமையால் தன்னைத் தானே புகழுவோன் வசைக ளெல்லாம் புடவியே யெடுத்து ரைக்கப் பூணுவன் நிந்தை யம்மா. |
|
| குளிக்க நினைத்துப் போய்ச் சேற்றில் மூழ்குதலும், விளக்கைத் தூண்ட விரும்பி ஊதி அணைத்தலும்போல, ஒருவன் அறியாமையால் தன்னைத்தானே புகழ்ந்துகொள்வானானால் உலகோர் அவனுடைய பழியை எடுத்துரைப்பர். அதனால் இகழ்வு பெறுவன். |
| சடம்-உடல். சகதி-சேறு. சுடர்-விளக்கு. தொலைத்தல்-அணைத்தல். வசை-பழி. நிந்தை-இகழ்வு. பூணுவன்-பெறுவன். |
| 7 |
| வேறு |
| தற்புகழ்வோர் துரும்புபோல் தாந்திரிந் துழல்வர் |
378 | குலமணி வெளியு றாதாழ் குரவையூ டொளித்தி ருக்கும் சலமிசை எவருங் காணச் சஞ்சரித் திடுந்து ரும்பு |
|