| புகழும் இகழும் மதியாமை |
| கலமென மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர் புலனில்சீத் தையர் தமைத்தாம் புகழ்ந்தெங்கும் திரிவர் மாதோ. |
|
| சங்கு முத்து பவழ முதலிய உயர்ந்த விலை வரம்பிலாப் பொருள்கள் கடலினுள் ஆழத்தில் அமைந்திருக்கும். விலையிலாத் துரும்பு நீரின் மேன்மட்டத்து அலைந்து திரியும். அதுபோன்று மானமே அணிகலனாகப் பூண்டோர் அடக்கமுடையராய்த் திகழ்வர். அறிவிலாக் கீழோர் தம்மைத்தாமே புகழ்ந்து உழல்வர். |
| அரிமா-சிங்கம். |
| 8 |
| ------ |
| அதி. 37-புகழும் இகழும் மதியாமை |
| உலகோர் புகழிகழ் உள்ளவா றாகா |
|
379 | தன்றுணை யிலானே யுள்ளத் தன்மையை யறிவான் பூமி இன்றொரு வனைத்து திக்கும் ஏசிடு மவனைப் பின்னும் நன்றினைத் தீதென் றுன்னுந் தீதைநன் றென்ன வுன்னும் பொன்றுமா னிடர்பு கழ்ச்சி புனலின்மேல் எழுத்துக் கொப்பே. |
|
| தனக்கொப்பிலாத முழுமுதலே ஆவிகளின் மனப்பாங்கை அறிவான். உலகோர் இன்று ஒருவனை மட்டின்றிப் புகழ்வர். அவனையே உடன் அளவின்றித் திட்டுவர். மேலும் நன்மையைத் தீமையெனக் கருதுவர். தீமையை நன்மை எனவும் கருதுவர். நிலையிலா மக்கள் புகழும் புகழ்ச்சி நீர்மேல் எழுத்தாம். |
| துணை-ஒப்பு. பூமி-உலகோர். புனல்-நீர். |
| 1 |
| நீ.-12 |