| நீதிநூல் |
| உள்ளும் புறமும் ஒவ்வாச்சொல் உண்மையன்று |
384 | அத்திசூ ழுலகிற் சில்லோர் அகத்தொன்றும் வாக்கி லொன்றும் வைத்திதஞ் சொல்லா லியாவும் வனச்செவி யேற்ப தன்றிச் சத்திய மெனக்கொண் டேகல் சக்கினை மூடி நீண்ட பித்திகை யேறிச் செல்லும் பேதைமை நிகர்க்கு மாதோ. |
|
| கடல் சூழ்ந்த உலகத்தில் சிலர் உள்ளொன்றும் புறம் ஒன்றும் வைத்து இன்உரையாடலால், அவ்வுரைகளை அழகிய செவியிற் கொண்டு விடுவதன்றி உண்மையெனக் கொண்டால், அது கண்ணை மூடிக்கொண்டு, பெரிய மதில்சுவர்மேல் ஏறும் அறியாமையை ஒக்கும். |
| அத்தி-கடல். இதம்-இனிமை. வனம்-அழகு. சக்கு-கண். பித்திகை-சுவர். பேதைமை-அறியாமை. |
| 6 |
| வேறு |
| பகைவர்சொல் ஆய்வால் பயன்பெரி துண்டாம் |
|
385 | தன்னைத் தன்குணத் தன்மையைத் தேரவே உன்னு கின்றவன் ஓங்கிய நட்பினோர் நன்ன யச்சொல்நம் பாமல்நள் ளார்தினம் பன்னு மாற்றங்கள் நம்பிற் பயனரோ. |
|
| தன்னையும் தன்னுடைய பண்புகளையும் பிழைப்பு வாய்ப்பு ஆராய நினைக்கின்றவன் தனக்கு வேண்டிய நண்பர்கள் சொல்லும் இன்சொற்களை முற்றும் அப்படியே நம்பாமல், தன் பகைவர்கள் சொல்லும் வன்சொல்லை நம்பி அச்சொல்லுக்குரிய குற்றங்களைத் தன்பால் நின்றும் அகற்றிவிடின் ஆராய்வின் பயனுண்டாம். |
| குணம்-பண்பு. நள்ளார்-பகைவர். மாற்றம்-சொல். |
| 7 |
| ------ |