| உண்ணச் சோறிலார்க்குச் சோறு கொடுப்பவராய், உறைய வீடிலார்க்கு வீடு அளிப்பவராய்த், துன்புறுவார்க்குத் துன்பம் நீக்கி மகிழ்ச்சி விளைவிப்பவராய், நோயுற்றார்க்குச் சிறந்த மருந்து கொடுப்பவராய், செல்வமிலார்க்குப் பணம் ஈபவராய், நல்ல தாய் தந்தையர் இல்லாதார்க்கு அவ்வவர்களாய் நின்று உதவுபவராய், உறவு இலார்க்கு உறவினர் போன்று காப்பவராய் எல்லார்க்கும் வேண்டும் எல்லாம் வழங்குபவராய் வாழ்தலே அன்பாகும். |