| நீதிநூல் |
| பிறர்க்குள்ளன நமக்கென்று உதவுவோர் பேரன்பர் |
396 | சீவ அன்பு சுகுணங் களின்முதலாம் தீதி லன்பை யுடையோர் பிறர்துயர்தம தாவ தென்ன அயர்வார் பிறர்சுகமும் தம்ம தென்ன மகிழ்வார் தினம் வணிகர் மேவ லோடு கொளுவோர் வரவுன்னும் விதமெ னத்தம சகாய மதுறவே யாவர் சார்வ ரெனவா சையினோக்கி ஏன்ற மட்டு நலமே புரிவாரால். |
|
| உயிருக்கு அமைந்துள்ள அன்பு நல்ல பண்பு முதலியவற்றில் சிறந்த அன்பையே உயிராகக் கொண்டுள்ளோர், பிறர் படும் துன்பம் தம்மதாகக்கொண்டு மனங் கவல்வார். பிறர் கொள்ளும் இன்பத்தைக் கண்டு அதுவும் தம்மதெனவே கொண்டு மகிழ்வார். நாள்தோறும் செட்டிகள் விழைவுடன் பண்டம் வாங்க வருவோர் வரவையே நினைக்கும் முறைபோல் தம்முடைய கைம்மாறு கருதாத உதவியைப் பெற்றுக்கொள்ள வருவோர் யாவர் என்று விருப்பத்துடன் வழி பார்த்திருந்து ஒல்லும் வகை நல்லதே செய்வர். |
| சுகுணம்-நல்ல பண்பு. தாவு-வருத்தம். அயர்வார்-மனங் கவல்வார். மேவல்-விருப்பம். உன்னும்-நினைக்கும். ஏன்றமட்டும்-ஒல்லும்வகை. புரிவார்-விரும்பிச் செய்வார். |
| 11 |
| வேறு |
| அன்பின்றேல் பேரின்பம் அடையார் யாரும் |
|
397 | எவ்வருணர் எச்சமயர் எப்பதியர் எத்தொழிலர் எனினும் நாணோடு அவ்வவர்க ளெவ்வமுரை யாமுன முணர்ந்துதவல் அன்பின் நிலையாம் இவ்வரிய அன்புடைமை யின்றிநிரு வாணமுற எண்ணி விழைதல் பௌவவுல கத்துருளில் தேரினைந டாத்தவுனு பான்மை நிகரால். |
|
| எவ்வகைக் குலத்தினரும் எவ்வகைக் கொள்கையரும் எவ்வகை ஊரவரும் எவ்வகைத் தொழில் செய்வோரும் தங்கள் மானத்தைவிட்டுத் தங்களுக்கு ஓர் உதவி வேண்டும் எனக் கூறு |