| கைம்மாறு கருதா உதவி |
| பிறர்துயர் போக்கிப் பேணுக புகழுடல் |
402 | புறம்வ ருந்திடப் பூத வுடம்பினை மறவு டம்பை வளர்ப்ப ரறிவிலார் உறவி டும்பை உறாவண்ண மீந்துநல் அறவு டம்பை வளர்ப்ப ரறிஞரே. |
|
| பக்கத்திலுள்ளவர்கள் பசி நோய் முதலியவற்றால் வருந்தக் கண்டும் அறிவில்லாதவர் ஐம்பூதத்தாலாகிய பருவுடம்பை-பாவவுடம்பை-வளர்ப்பார்கள். அறிவுடையவர்கள் எவரும் எவ்வகைத் துன்பமும் அடையாதபடி மிகுதியாகக் கொடுத்துத் தம் அறவுடம்பை-புகழுடம்பை வளர்ப்பார்கள். |
| புறம்-பக்கம். பூதம்-பருமை. மறம்-பாவம். உற-மிகுதியாக. அறம்-புண்ணியம்; புகழ். |
| 17 |
| தேடிநல் உதவி செய்வோர் பெரியோர் |
403 | ஓடி யெங்கு முலரும்பைங் கூழ்களை நாடி மைமுகி னன்மழை பெய்தல்போல் வாடி நையும் வறிஞ ரிருக்கையைத் தேடி மேலவர் செய்வ ருதவியே. |
|
| மழையின்றி வாடும் நெற்பயிர்களை ஆராய்ந்து விரைந்து சென்று எவ்விடத்தும் கரிய மேகம் மழையைப் பொழிதல்போல, அறிவுடையோர் வாடி வருந்தும் ஏழைகள் தங்கும் இடத்தைத் தேடிச்சென்று வேண்டும் உதவிகளைச் செய்வர். |
| பைங்கூழ்-நெற்பயிர். மை-கருமை. முகில்-மேகம். நையும்-வருந்தும். மேலவர்-அறிவுடையோர். |
| 18 |
| இரந்தும் ஏழைகளுக்கு ஈவர் நல்லோர் |
|
404 | காரி டத்திரந் தேனுங் கயநதி நீரி னைப்பணை யெங்கு நிறைத்தல்போல் யாரி டத்திரந் தேனு மறமுளார் பாரி டத்துப் பகுப்பர் வறிஞர்க்கே. |
|