பக்கம் எண் :

193

  பொருளாசை யொழித்தல்
 
  தும் முடவராய், உயிரிருந்தும் அஃதில்லாத வெற்றுடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீப்பொருளை வளரும் செல்வமாம் வாழ்வென நினைத்தனை.
  நோக்கு-கண். அந்தகர்-குருடர். மூகை-ஊமை. பூட்சி-உடல். அகம்-மனம்; செருக்கு; நெஞ்சம்.
 

3

  செல்வர்பால் கூற்றுவன் சேர்வது இன்றோ?
411
நிறைசெல்வ முடையாரை நோய்துன்ப
    மணுகாவோ நினைத்த தெல்லாங்
குறையின்றிப் பெறுவரோ புவிக்கரசு
    செலுத்துவரோ குறித்த வாயுள்
பிறையென்ன வளருமோ இயமன்வர
    வஞ்சுவனோ பேரின் பத்துக்கு
உறையுளோ அவர்கிரக மிவையெலா
    மனமேநீ யுன்னு வாயே.
  நெஞ்சே! நிறைந்த செல்வமுடையாரைப் பசிநோய் உடல்நோய் துன்பம் முதலியன அணுகாவோ? நினைத்ததெல்லாம் குறைவில்லாமல் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வரோ? வரையறுக்கப்பட்ட அகவை பிறைபோன்று வளர்ச்சி யுறுமோ? இவரிடம் கூற்றுவன் வர நடுங்குவனோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்துக்கு உறையுளோ? இவையனைத்தையும் கருதிப் பார்ப்பாயாக.
  ஆயுள்-அகவை. இயமன்-கூற்றுவன். உன்னு-கருது.
 

4

  களவுங் கூத்தும்போல் அழியும் வாழ்வு
412
கனவதனிற் கண்டபொருள் செலவுக்கா
    மோகுனிக்குங் கங்குற் கூத்தில்
இனரமைச்ச ரென வேடம் புனைந்தவர்தம்
    மாணையெங்கு மேகு மோவிண்
கனமின்போ லொழியுமந்தப் புவிவாழ்வு
    நிலையென்னக் கருதிக் கோடி*
நினைவுற்றா யுடல்வீழி னென்செய்வா
    யறிவில்லா நெஞ்சக் கல்லே.
 

*ஒருபொழுதும். திருக்குறள் 337

 

நீ.- 13