பக்கம் எண் :

197

  பொருளாசை யொழித்தல்
 
  கிறது. இஃது ஓசையின்றி உன் நம்பகத்தைக் கெடுத்து, பலர் கையில் சார்ந்துவிடும். நான் கூறுவதை நம்பு. இப்பொருள் உன்னை விட்டகலுமுன் நீ நல்லவர்க்குக் கொடுக்கும் நற்செயலைச் செய்வாயாக.
  அமர்தல்-போக்கிடமின்றியிருத்தல். சப்தம்-ஓசை. மோசம்-நம்பிக்கைக் கேடு. அனந்தம்பேர்-பலபேர். சித்தம்-மனத்தின் எண்ணும் நிலை. சற்பாத்திரம்-நற்பண்புடைமை.
 

10

  செல்வமெனப் பெயரிடலால் சிலர் வறுமைப் பேர்பெற்றார்
418
கதிரவனா லொளியுறும்பல் வகைக்கல்லை
    மணியென்றுங் காமர் மண்ணை
நிதிவெள்ளி யுலோகமென்றும் பெயரிட்டும்
    விலையிட்டும் நிகழம் மண்ணால்
சதியான காசுபண மெனச் செய்துந்
    தரையின்மிடி தனைய மைத்தோர்
மதியிலா நரரன்றிக் கடவுளோ
    சொல்லுவாய் மருள்சேர் நெஞ்சே.
  மயக்கங்கொள்ளும் நெஞ்சே! ஞாயிற்றின் ஒளியினால் விளக்கமுறும் கற்களை ஒளிக்கற்களென்றும், அழகிய மினுக்கமுள்ள மண்ணைச் செம்பொன் வெண்பொன் என்று பெயரும் மதிப்பும் அமைத்துப் பின் அழிவுறும் காசு பணமெனச் செய்தும், இவையில்லாதார் வறியரென்றும் ஆக்கியவர் அறிவிலா மக்களே ஆவர். கடவுளோ சொல்லுவாயாக.
  கதிரவன்-ஞாயிறு. மணி-ஒளிக்கல். (இரத்தினம்) உலோகம்-பொன்முதல். சதி-அழிவு. முடி-வறுமை. மருள்-மயக்கம்.
 

11

  தேவைக்குமேல் செல்வமெலாம் சேர்ப்ப தெதன்பொருட்டு
419
தரையெலா நமதெனினு மிருப்பிடமோர்
    முழமேநற் றானி யங்கள்
வரையென்னக் குவிந்துகிடந் தாலுமுண்ப
    தரைநாழி வளர வாவால்