பக்கம் எண் :

206

  நீதி நூல்
 
  யான வெயில் மழை பனி உதவா. அவை இல்லாவிட்டால் நொடிப் பொழுதும் உடல் நிலைக்காது. நாள்தோறும் அளவிடப்படாத இக்கட்டு. கண்ணிமைப் பொழுதேனும் உடல்மேல் நினைப்பின்றேல் நீர்க்குமிழிபோல் கெடும். இத்தகைய உடம்பையே நாம் சுமந்து திரிகின்றோம்.
  அனம்-சோறு. வாயு-காற்று. ஆவி-உயிர். கணம்-நொடி. கண்டம்-ஆபத்து; இக்கட்டு. பூட்சி-உடல்.
 

12

  உறுதியற்ற வாழ்நாட்கு உள்ளமே செய்வதென்?
434
பொன்றுநா ளின்னதென நிலையுண்டே
   வாழிசூழ் புவியோ ராயுள்
ஒன்றிரண்டு நாளெனினும் போதுநூ
   றாண்டென்றோர் உரையுண் டேனும்
இன்றோஇக் கணமோபின் னுறுங்கணமோ
   மாலையோ இரவோ சாவது
என்றோவென் றோருறுதி யில்லாத
   ஆயுளிதற் கென்செய் வோமே.
  (மனமே!) இறக்கும்நாள் இன்னநாள் என்று ஓர் உறுதி யிருக்குமானால் கடல் சூழ்ந்த உலகினருக்கு அகவை ஒன்றிரண்டு நாளாக இருப்பினும் அமையும். அகவை நூறாண்டு உண்டு என்ற ஓர் உறுதியற்ற சொல் உண்டு; என்றாலும், இன்றோ, இப்பொழுதோ, பிற்பொழுதோ, மாலையோ, இரவோ சாதல் என்றோர் திடனில்லை. இத்தகைய அகவையை உடைய நாம் செய்யக் கடவது யாது?
  பொன்று நாள்-சாவும்நாள். ஆயுள்-அகவை.
 

13

  ஆடு மாடு நெல்லால் ஆமுடற்கு அப்பெயர்
435
தொல்லுலகிற் புல்லிலையுண் ணாடுமுத
   லுயிர்களைநற் சுரபிப் பாலை
நெல்லுடன்பல் தானியத்தைக் காய்கனியைக்
   கிழங்கிலையை நிதமு முண்டு
மல்லுறவே வளருமிந்தக் காயத்தை
   மரமென்றும் மாடா டென்றும்
புல்லென்றும் நெல்லென்றுஞ் செடியென்றுங்
   கொடியென்றும் புகல லாமே.