| துன்பம் |
| இறக்கும் வரை உள்ள துன்பம் எண்ணி மகவு அழும் |
439 | பிறந்த சேயுட னேயழும் பீழைதான் சிறந்த மாநிலஞ் சேர்ந்துபின் னாருயிர் இறந்து போமள வுந்துய ரென்பதை அறிந்து நீர்விட் டனுங்கலை யொக்குமே. |
|
| தாய் வயிற்றினின்று தோன்றியவுடனே பிள்ளை வீறிட்டு அழும் துன்பம், உயிர் உயர்ந்த பெரிய உலகில் சேர்ந்ததுமுதல் இறந்து போம் அளவும் இடையறாத துன்பமென்பதை அறிந்து, கண்ணீர்விட்டு வருந்துவது போலும். |
| சேய்-பிள்ளை. பீழை-துன்பம். அனுங்கல்-துன்பம். |
| 2 |
| வேறு |
| நிலைத்த இன்பம் நீளுலகில் இன்று |
440 | கோடிபொன் னுடையவ ரெனினுங் கோமுடி சூடிய வேந்தரே யெனினுந் துன்பொடுங் கூடிய வாழ்க்கைய ரன்றிக் கூறுங்கால் நீடிய சுகமுளோர் நிலத்தி னில்லையே. |
|
| அளவில்லாத செல்வத்தை உடையவரானாலும், மணிமுடி சூடி மன்னர் மன்னராய்த் திகழ்ந்தவரானாலும் துன்புடன் கூடிய வாழ்க்கையராவர். ஆய்ந்து சொல்லுமிடத்து நிலைத்த இன்பமுள்ளவர் நிலவுலகத்தில் ஒருவரும் இலர். |
| கோடி-அளவில்லாமையைக் குறிப்பது. கோமுடி-மன்னர் மன்னன் சூடும் மணிமுடி. நீடிய-நிலைத்த. சுகம்-இன்பம். நிலம்-உலகம். |
| 3 |
| பொருளிழப்பால் கீழோர் பொறாது பொன்றுவர் |
441 | பாக்கிய நிலையெனும் பதக ரோர்துயர் தாக்கிடிற் பொறாதுயிர் தன்னைப் போக்குவர் ஆக்கிய வாக்கமு மஞரு மொன்றென நோக்கிய சீலரை நோயென் செய்யுமே. |
|
| செல்வம் நிலைத்து நிற்கும் என்னும் அறிவில்லாத கீழோர் பொருட் கேட்டால் ஒரு துன்பம் தம்மை வருத்தின், அத்துன்பம் |
| நீ.- 14 |