பக்கம் எண் :

211

 

துன்பம்
 

 

புன்செய்-வானம் பார்த்த விளைநிலம். படர்-துன்பம். அறம்-நன்மை. அரிது-முடியாது.

 

6

      உழைப்பூணுறக்கம் கூடக் குறைய நோயுறும்
444
ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு
தூங்க லால்துயில் இன்மையால் சினத்தினால் துவக்கு
தாங்கொ ணாத்தொழில் செயன்முத லேதுவால் சடநோய்
ஆங்கு றுஞ்சடம் செய்தவன் கைப்பிழை யன்றால்.  
 

மிக்க இணைவிழைச்சால், மடியினால், அளவுக்கு மிஞ்சிய உணவினால், பெருந்துயிலால், உறக்கம் இல்லாமையால், சினத்தினால், உடல் தாங்கமுடியாத அளவு உழைத்தல் முதலிய காரணங்களால் உடலுக்கு நோய் வரும். இவையன்றிப் படைத்த கடவுளின் செய்கைத் தாழ்வினால் அன்று.

  காமம்-இணைவிழைச்சு. ஊங்கு-மிகுதி. துவக்கு-தோல். சடம்-உடல். செய்தவன்-படைத்த கடவுள்.
 

7

    உலக அழிவும் உய்வுக்கே வருமால்
445
பலருய் வான்சிலர்ப் படுத்திடும் பதியெனப் பரன்பார்ச்
சலனம் தீவரை யிடிபெருங் கான்முதல் தாபம்
கலவு றச்செயுங் காரணம் யாதெனிற் கணக்கில்
உலக கோடிசம் பந்தத்தா லெனவுண ருளமே.
 

நெஞ்சே! ஆளும் மன்னன் நாளும் பலர் துன்பமின்றி இன்புடன் வாழ, இடையூறாகவுள்ள சிலரைக் கொல்லுவதுபோல், ஆண்டவன் பலகோடி உலகத்தொடர்பால் நிலநடுக்கம் எரிமலை பேரிடி சூறைக்காற்று முதலிய உலகழியும் துன்பத்தையும் உண்டாக்குவான்; இதனை அறிவாயாக.

 

படுத்திடும்-கொல்லும். சலனம்-நடுக்கம். கால்-காற்று. தாபம்-துன்பம். சம்பந்தம்-தொடர்பு.

  8
 

               பத்தரை ஆளவே பரன்துன் பருள்வன்

446
பத்த ரன்பினைச் சோதனை பண்ணவும் பார்மேல்
வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்விற்
சித்த மெய்தவும் அன்னரைத் துயர்செயுந் தெய்வம்
அத்தன் சேயரை யடித்தறி வுறுத்தல்போ லம்மா.