| கணிகையரியல்பு |
| தில் பொன்னாலாய பொட்டொன்று கண்டேன். மகிழ்ந்தேன்; ஏதென்றேன்.அவள் `பொதுமகளுக்குக் கிடைத்ததுபோல், உமதருள் எனக்கும் கிடைக்கவேண்டும்; அதன்பொருட்டுப் பொட்டணிந்து பொதுமகள் ஆனேன்,ழு என்றாள். |
| மனை-மனைவி. தாலி-மங்கலநாண். |
| 3 |
| பொதுமகளுக்கு ஆண்பஞ்சம் புகல்வது வீணே |
480 | ஆவியனை யாளையோர் பொழுதுபிரிந் தவளில்ல மணுகுங் காலை மேவுபாங் கியைக்கண்டாண் துணையின்றி வருந்தினளோ மின்னா ளென்றேன் நாவிதனுக் குண்டோகாண் மயிர்ப்பஞ்ச மலப்பஞ்சம் நாய்க்கு முண்டோ தேவிதனக் குண்டோஆண் பஞ்சமென்றாள் அதன்பொருளைத் தெரிகி லேனே. |
|
| உயிர் ஒத்த பொதுமகளை ஒருபொழுது பிரிந்து அவள் வீடு சென்றேன். தோழியைக் கண்டேன். `உன்தலைவி, ஆண் துணை (யான்) யில்லாமல் வருந்தினாளோ?ழு என்றேன். அவள் `மயிர்வினைஞனுக்கு மயிர்ப்பஞ்சமும், நாய்க்கு மலப்பஞ்சமும் உண்டோ? அதுபோல் என் தலைவிக்கு ஆண்பஞ்சமும் உண்டோ? என்றாள். அதன் உள்ளுறைப் பொருள் ஒன்றும் விளங்கவில்லை. |
| பஞ்சம்-பொருள்கிடையாமை. |
| 4 |
| பொருளிழந்து மூதேவியைப் பொருந்தவரும் வெறுப்பு |
481 | செவ்வையுறு பொருள்கவர்ந்த பின்னரெனைக் கைவிட்ட தேனை நோக்கிக் கொவ்வைவாய் மயிலேயிச் சினமேதென் றேன்வனசக் கோயின் மேவும் அவ்வையைமுன் சேர்ந்தபிழை பொறுத்தவளை யென்னகத்துக் கழைத்தேன் அன்னாள் தவ்வையையு மருவினீர் இனிப்பொறே னென்றூடிச் சலங்கொண் டாளே. |
|