| நீதி நூல் |
| நாடும்வசை யுயிருய்யே னென்றேனீ மாய்ந்திடின்முன் னான்கொ டுத்த ஓடுமற்ற மருகர்க்காம் நான்றுகொள்நீ யெனக்கயிறொன் றுதவி னாளே. |
|
| கூனல் வாய்ந்த தாய்க்கிழவியாம் மாமி என்னைக் கள்ளும் ஊனும் களவுசெய்துகொண்டு வரும்படி கட்டளையிட்டாள். `நான் சிறப்பு மிக்க பார்ப்பானன்றோ?ழு எனக் கூறினேன். `கள்ளும் ஊனும் உண்டால் உன்னுடைய பாவம் எல்லாம் அகலும்,ழு என்றாள். `ஐயோ! நாடு பழியுரைக்கும்; யானும் உயிருடன் வாழ முடியாது,ழு என்று கூறினேன். `நீ மாண்டுவிட்டால் உன்கையில் நான் தந்த பிச்சை ஓடு இனியுள்ள மருகர்களுக்கு ஆகும். நீ தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிடு,ழு என்று கயிறொன்று தந்துதவினாள். |
| கோடு-கூனல். பாடு-சிறப்பு. வசை-பழி. நான்று கொளல்-தூக்கிட்டுக் கொளல். |
| 12 |
| பசிமண் ஓடு பற்றலால் முத்தேவர் பாங்கானோம் |
489 | பசையறவெம் மாவியன்னாள் கைப்பொருளெ லாம்பறிக்கப் பசியால் நான்கு திசைமுகமு நோக்கலாற் றிசைமுகனா னோம்வாயிற் றீயாள் இட்ட வசையான மண்ணுண்டு மாயனா னோங்கையின் வாங்கு மோட்டால் இசைமேவு மீசனா னோம்புவியில் நமையொப்பார் எவர்தாம் அம்மா. |
|
| எம் உயிரையொத்த பொதுமகள் எம்முடைய கைப்பொருள் எல்லாங் கவர்ந்து யாம் வெறுமையானபின் பசியால் நாற்புலமும் நோக்கலானேம்; அதனால் நான்முகனானோம். அக்கொடியாள் வைது திட்டி வாயில் மண்ணை யள்ளியிட்டாள். அதனால் மண் உண்ட மாயவனானோம். அவள் தரும் ஓட்டைக் கையில் வாங்கியதால் புகழ் மிக்க முதல்வனாம் ஆண்டவனானோம். ஆதலால், முத்தேவராகிய நம்மை ஒப்பவர் இவ்வுலகில் யாவருளர்? |
| பசையற-பொருள் நீங்க; வறுமையுற. ஈசன்-முதல்வன்; ஆண்டான.் புவி-உலகம் |
| 13 |