| | நீதிநூல் |
| | கடவுளைத் தொழுவோர் காண்பர்பே ரின்பே |
| 32 | மாசறு கடவுள் பாத மலரினைத் தினமும் போற்றிப் பாசமில் சுகம்பெ றாமற் பவஞ்சத்தூ டுழலல் பைம்பொன் ஆசனந் தன்னிலேறி யரசுசெய் தகைமை நீத்துக் காசனக் கழுவி லேறுங் கயமையே கடுக்கு மாதோ.
|
|
| | ஆண்டவன் திருவடியை நாளும் தொழுது துன்பமில்லாத இன்பத்தை எய்தாமல் உலகில் அலைதல், உரிய அரசிருக்கையில் இராமல் கொலைக்கழுவில் ஏறுவதை யொக்கும். |
| | காசனம்-கொலை. கடுக்கும்-ஒக்கும். பவஞ்சம்-உலகு. |
| | 16 |
| | கடவுளைத் தொழா உறுப்புக் கல்மண்தீ யாமே |
| 33 | போதநா யகனை யுன்னாப் புந்தியே வெந்தீ யொப்பாந் தாதல ரடிவ ணங்காத் தலைகுலை சிலையாஞ் சீர்சான் மாதலத் தவனை வாழ்த்தா வாயது தூயதன்று காதலன் பொடுநீர் தூவாக் கண்களே புண்க ளாமால்.. |
|
| | அறிவு உருவான ஆண்டவனை எண்ணாதநெஞ்சம் தீ; அடிவணங்காத் தலை உடைகல்; வாழ்த்தா வாய் மாசுடையது. இன்ப நீர் பெருக்காத கண் புண் ஆகும். |
| | போதம்-அறிவு. |
| | 17 |
| | எல்லாம் இன்பெய்தக் கடவுளை ஏத்தும் |
| 34 | கதிரவன் கிரணக் கையால் கடவுளைத் தொழுவான் புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித் துதிசெயுந் தருக்க ளெல்லாம் பொதியலர் தூவிப் போற்றும் பூதந்தந் தொழில்செய் தேத்தும் அதிர்கட லொலியால்வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தா தென்னே. |
|
| | கடவுளைக் கதிரவன் தன் கதிர்க்கையால் தொழுகின்றான். பறவைகள் குரலெடுத்து ஆடிப் பாடிப் போற்றும். மரங்கள் மலர் தூவிப் போற்றும். பூதங்கள் தொழில் செய்து ஏத்தும். கடல் ஒலியால் வாழ்த்தும். நெஞ்சமே நீ வாழ்த்தாத காரணம் என்ன? |
| | 18 |