பக்கம் எண் :

241

  கணிகையரியல்பு
 
  கிட்டுக் கொன்றும், பிறன் வேண்டும் கைப்பொருளைக் களவு செய்யும் உழையாக் கோழையரைக் கடுங்காவலில் வைத்தொறுத்தும், கள்ளுண்டல், சூதாடல் முதலிய இழிசெயல் செய்வோரை வெறுங் காவற் சிறையிட்டுத் தண்டித்தும் முறை செய்வர். இவர்கள் ஆடவர் உயிருக்குப் பெருங்கேடு சூழும் இயல்பும், பெரும்பாவமே பெருத்து ஓர் உருவெடுத்த வடிவும் கொண்ட விலைமகளாம் பொதுமகளைத் தூக்கிட்டுக் கொன்றுவிடாமல் ஐயோ யாது செய விடுத்தார்.
  புலைஞர்-இழிந்தோர்; கயவர். உலைவைத்தல்-பெருங்கேடு சூழ்தல்.
 

20

  பூங்கணைக் கஞ்சாள் பொன்கணைக் கஞ்சுவள்
497
பணயமே திரணமன்பு பெரிதென்ற
    பாவைபொருள் பறித்த பின்னர்
அணையேனென் றாளனங்க னுனக்கிலையோ
    வென்றேமவ் வறிவி லான்பூங்
கணைகளையே விடுத்தானா னஞ்சுவனோ
    காணுமெனுங் கதிரங் கொண்டென்
இணைமுலைமேற் றெறித்திடின்வெல் வானென்றாள்
    இவள்மனம்வல் லிரும்போ அம்மா.
  செல்வமிக்க காலத்தில் பொதுமகள் `பொருள் ஒருதுரும்பு உங்கள் அன்பே பெரிதுழு என்று கூறி நம் பொருளெல்லாம் பறித்தாள். பின்பு பொருளில்லாக் காலத்துக், கிட்டவும் வாரேன்; எட்டியும் பாரேன்,ழு என்றாள். உனக்குக் காமன் இல்லையோ என்று வினவினேன். அவள் `அறியாமை மிக்க கருவேள் பூங்கணைகளை என்மேல் விடுத்தான். அவற்றிற்கு யான் அஞ்சேன். பொருள் என்று சொல்லப்படும் பண அம்புகொண்டு என் மார்பின்மேல் வீசினால், வெல்வான்,ழு என்றாள். இவளுடைய உள்ளம் வலிமை மிக்க இரும்போ.
  பணயம்-பொதுமகளுக்குக் கொடுக்கப்படும் பொருள்; திரணம்-துரும்பு. அனங்கன்-காமன். காணம்-பொருள்; பணம்-கதிரம்-அம்பு.
 

21

  பொல்லாங் குருவே பொதுமகள் உருவம்
498
வடிவுமிகு கொழுநர்தமை வேசியர்வவ்
    விடவருந்தும் வாட்கண் நல்லீர்
கடினமனங் கணக்கிலா ஆடவர்சம்
    போகமுயிர் கவர்தல் வஞ்சங்
 

நீ.-16