பக்கம் எண் :

243

  கணிகையரியல்பு
 
 இருமனத்தால் பிணமாதல் இயையும் பொதுமகட்கே
500
கலவிசெய்த மாதென்னை விலைகேட்டா
    ளுடனொக்கக் கலந்து காம
நலமுண்ட வுனக்குவிலை யேதென்றேன்
    சவமனைய நான்சு கிக்க
இலையென்றாள் பொய்யென்றேன் வள்ளுவர்கூ
    றியகுறளா மினிய நூலில்
விலைமாதைச் சேர்தல்பிணந் தழுவியதை
    யொக்குமென்றார் வீணோ வென்றாள்.
  என்னுடன் இன்புற்ற பொதுமகள் அவ் இன்ப விலையாம் பொருள் ஈக என்றாள். யான், `நீயும் என்னுடன் இன்புறவில்லையோ? என்றேன். `இல்லைழு யென்றாள். ஏன் என்றேன். `யான் பிணமாம் நிலையொத்து மனம் பொருந்தாதிருந்தேன். அதனால் எனக்கு இன்பமில்லை. இவ்வுண்மை, திருவள்ளுவ நாயனார் ழுபொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையிலேதில் பிணந்தழீஇ யற்றுழு என்றருளிய தமிழ்மறையாலுணர்ந்து கொள்க,ழு என்றனள்.
  காம நலம்-இன்பம்.
 

24

  தந்தையைக் கொல்லவும் பொதுமகள் சாற்றுவள்
501
தையலில்லம் புகும்போதென் சுதன்குரலைக்
    கேட்டொதுங்கித் தாழ்வா ரத்திற்
பையவொன்றிச் செவிகொடுத்தேன் பாலனைப்பார்த்
    தக்கோதை பணமீ யென்றாள்
ஐயனிறந் திடிலெல்லா முனதென்றா
    னவன்தூங்கும் சமையம் பார்த்தோர்
சையமெடுத் தவன்றலைமேற் போடுவாய்
    போடுமுன்நான் தழுவே னென்றாள்.
  பொதுமகள் வீட்டிற்குள் நுழையும்போது என் மகன் குரலைக் கேட்டேன். சற்று ஒதுங்கித் தாழ்வாரத்தில் நின்று ஒற்றுக் கேட்டேன். அப்போது பொதுமகள் என் மகனைப் பார்த்துப் பணம்கொடு என்றாள். அவன், `என் தந்தை இறந்து விட்