பக்கம் எண் :

246

  நீதி நூல்
 
  ஐவகை முதற் பொருள்களுள் ஒன்றாகிய பொன் நம் இருவரையும் ஒரு அமளியில் சேர்த்துவைக்கும் நீ அறி என்றாள்.
  அந்தம்-அழகு. உரிமை-மனைவி. அத்தம்-பொன். அரி-திருமால். அரியின் மகன்-சுக்கிரீவன். பந்தம்-இணைப்பு. அரி-பொன். அரி-கட்டில்; அமளி.
 

28

  அத்தை சொக்குத்தூள் அடிக்குப் பொன் தூளாம்
505
இனியாளை நோக்கியத்தை சக்கிரிக்குச்
    சொக்குத்தூ ளிடுவா யென்ற
தொனிகேட்டுச் சினந்துநான் குயவனோ
    வெனைமயக்கத் தூளோ வென்றேன்
தனியரசாஞ் சக்கிரிநீ யாகையினின்
    னடிமலர்தோய் தான மெல்லாம்
நனியேசொக் கெனுங்கனகப் பொடியிறையென்
    றேன்முனிதல் நன்றோ வென்றாள்.
  உயிரினும் இனியாளாகிய பொதுமகளைப் பார்த்துத் தாய்க்கிழவியாம் அத்தை, `அறிவிலாக் குயவனை ஒத்த செல்வனுக்கு நம்பால் பிணிக்கும் மயக்கத்தூள் இடுக,ழு என்றாள். அக்குரலொலி கேட்டு யான் சினங்கொண்டு, `நான் குயவனோ? என்னை மயக்க மருந்துப் பொடியோ? என்று கூறினேன். அவள், `உலகைத் தனியரசாளும் ஆணைச் சக்கரத்தையுடைய வேந்தர் நீராகையால், உம்முடைய அடிமலர் படும் இடங்களெல்லாம் மிகுதியும் பொன் தூள் பரப்புக என்று கூறினேன். இதற்கு நீர் சீற்றம் கொள்ளுதல் நன்றோ,ழுஎன்றாள்.
  சக்கிரி-மண் அறுக்கும் சக்கரத்தைக் கருவியாகக்கொண்டுள்ள குயவன். சொக்குத் தூள்-மயக்கப்பொடி. சக்கிரி-ஆணைச்சக்கரத்தைச் செலுத்தும் ஒப்பில்லாத மன்னர் மன்னனாம் வேந்தன். சொக்கு-பொன். முனிவு-சினம்; சீற்றம்.
 

29

  இருதிங்களில் மகப்பெறுதல் இயற்றிய தவப்பயன்
506
எனையன்றி மற்றோரைச் சேர்ந்தறியே
    னென்றகன்னி யிருதிங் கட்குள்
தனையனீன் றாள்புதுமை என்னென்றேன்
    நினையும்மை தழுவி யிச்சேய்