பக்கம் எண் :

247

  கணிகையரியல்பு
 
 
சினையாயெண் மதியிலிறந் தேனிகத்தும்
    உனைப்புணரச் செய்த நோன்பான்
முனையல்கு மிருமாத நிறைந்துடனிம்
    மகவீன்றேன் முதல்வ என்றாள்.
  என்னையன்றி வேறொருவரையும் சேர்ந்தறியேனென்ற கன்னிப் பொதுமகள் இரண்டு திங்களுக்குள் ஆண் மகவு பெற்றாள். ழுஇவ்வாறு இரண்டு திங்களுக்குள் பிள்ளை பெறுதல் புதுமையிலும் புதுமை. இதன் காரணம் என்ன? என்றேன். `முற்பிறப்பில் உம்மைத் தழுவி இச் சேயைக் கருவுற்று எட்டு மாதத்தில் இறந்தேன். இறக்கும்போது உம்மையே மறுப்பிறப்பிலும் இந்தக் கருவுற்ற நிலையோடு கூடவேண்டுமென்று கடுந்தவம் புரிந்தேன். அத் தவப்பயனால் முன்னைக் குறைவுற்ற இரண்டு திங்களும் நிறைவுற்றதும் மகப்பெற்றேன் தலைவ,ழு என்றாள்.
  தனையன்-மகன். புதுமை-வியப்பு. சேய்-பிள்ளை. மதி-மாதம். உம்மை-முற்பிறப்பு.
 

30

  தாய்க்கிழவிப் பேய்தடுத்தாள் தன் மகளும் ஆங்கிலளே
507
சிலர்மயில்வீ டுற்றனரென் றறிந்துண்மை
    யறியவங்குச் செல்லுங் காலை
புலனிழந்து நூறாண்டுங் கடந்தகூ
    னுடன்மாமி பூபா மாரன்
மலர்வாளி விடுத்தனன்சே ரெனையென்ன
    நெருங்கிவழி மறித்தா ளப்பேய்
கலவிதனக் கஞ்சிமீண் டோடினே
    னவள்சுதையைக் கண்டி லேனே.
  சிலர் மயில்போலும் சாயலையுடைய பொதுமகள் வீட்டுக்குச் சென்றனரென்று கேள்விப்பட்டு, உண்மை யறிய அங்கு விரைந்து சென்றேன். பொறிபுலன் நன்றாய்த் தொழிற்பட முடியாது ஆற்றலற்று ஆண்டு நூறுங் கடந்து உடல் கூனி `தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றிழு நடந்துவரும் தாய்க் கிழவியாகிய மாமி என்னை வழிமறித்து, `அரசே! என்மேல் காமன் பூங்கணை பொழிந்தனன். நீர் என்னைச் சேர்தல் வேண்டும்,ழு என்றாள். அப்பேயுடன் கூட அஞ்சி மீண்டு ஓடினேன். வீட்டில் அவள் மகளைக் கண்டிலேன்.
  கலவி-கூட்டம். சுதை-மகள்.
 

31