பக்கம் எண் :

248

  நீதி நூல்
 
 பொருளீவோர் ஈயார்மேல் கீழ்ச்சாதி பொதுமகட்கு
508
கைத்தனநா மிழந்தபின்கூன் முடவரந்
    தகர்நோயர் கடைக்கு லத்தர்
நித்தமரு விடவுள்ள முவந்தமின்னை
    நோக்கியிது நெறியோ வென்றேம்
அத்தமதிற் குருடூனஞ் சாதியிழி
    வுளதோவஃ தளிப்போர் மேலோர்
இத்தரையி லெனக்கீயார் கீழ்க்குலத்தர்
    சாதியிவை யிரண்டென் றாளே.
  கைப்பொருள் முற்றும் அற்றபின், பொதுமகளாம் மின் போலும் தையலை நோக்கிப், `பெண்ணே! கூனர் முடவர் குருடர் நோயர் இழிகுலத்தோர் முதலியவர்களை நாளும் உள்ளம் உவந்து கூடுதல் முறையோ?ழு என்றேன். `அவர் பொருளில் குருடு உறுப்புக்குறை இனத்தாழ்வு முதலிய குற்றம் உளதோ? இல்லையன்றே. அப்பொருள் அளிப்பார் யாராயினும் அவர் மேலோரே. இவ்வுலகில் எனக்குப் பொருள் ஈயார் கீழோரேயாவர். இவ்விரண்டே இனம்,ழு என்றாள்.
  கைத்தனம்-கைப்பொருள். அந்தகர்-குருடர். இனம்-சாதி.
 

32

  அளவிலா நோயை அளிப்பள் பொதுமகள்
509
கனைகடல்ம ணலையெணினும் வேசியர்சே
   ராடவர்க்கோர் கணித முண்டோ
அனையநீ ரளவிடினு மவருட்கொள்
    சுக்கிலத்துக் கத்துண் டோவவ்
வினையவர்மெய் யுரோமத்தை யெண்ணினுநோய்த்
    திரளெண்ண விதான முண்டோ
யினையவரைச் சேர்தல்பெருந் தீயினிடை
    மூழ்குதலை யேய்க்கு மாதோ.
  கடற்கரையின் நுண்ணிய மணலை எண்ணினும் பொதுமகளிரால் சேரப்படும் ஆடவரை எண்ணல் முடியாது. அவர் உடல்மேல் காணும் மயிரை அளவிட்டாலும் அவரால் தம்மைச்