பக்கம் எண் :

252

  நீதி நூல்
 
 

கன்னத்தில் கண்டவுரு நின்உருவே கள்வனன்று

515
வண்ணமல ரமளியின்மே லிருக்கையிலோர்
    பரபுருடன் வரவு நோக்கிப்
பண்ணமரு மொழிமின்னாள் விளையாடல்
    போற்றன்கைப் பதுமத் தாலென்
கண்ணதனை மூடிவிட்டே னெனநகைத்தாள்
    வேற்றாளார் கள்ளீ யென்றேன்
கண்ணடிபோற் றிகழுமென்றன் கபோலமதி
    லுன்னுருவைக் கண்டா யென்றாள்.
  நிறமும் மணமும் அழகும் நிரம்பிய பூப்பரப்பிய கட்டிலின்மேல் இருவரும் ஒன்றாய் இருந்தோம். அப்பொழுது அயலான் ஒருவன் வரக்கண்டதும், அப்பொதுமகள்-பண்ணமைந்த இனிய சொல்லையுடையாள் விளையாட்டுப்போல் என் கண்ணை அவள் தாமரைபோன்ற கையினால் பொத்தித் தான் என் கண்ணை மூடிவிட்டதாகச் சொல்லி நகைசெய்தாள். யான் சினங்கொண்டு `கள்ளீ! வந்த வேற்றாள் யார்? என வினவினேன். அவள் நாணமும் துன்பமும் கொண்டவள்போல் நடித்துக் கண்ணாடிபோல் விளங்கும் தன்னுடைய கன்னத்தில் என்னுடைய உருவம் தோன்றிற்று என்றும், அதனை யான் கண்டேன் என்றும் கூறி மயக்கினாள்.
  வண்ணம்-நிறம். அமளி-கட்டில். பரபுருடன்-அயலான். பதுமம்-தாமரை. கபோலம்-கன்னம்.
 

31

  கரவில்வந்தான் தனைக்கொன்றேன் கண்டேன் என்மகன் என்றே
516
இரவினிலென் னுடன்துயின்ற கோதையடிக்
    கடிவெளியே யேகி மீண்டாள்
கரவறிவான் பின்றொடர்ந்தேன் கொல்லையிலே
    காளையொடுங் கலந்து நின்றாள்
அரவமெனச் சீறியவ்வாள் மேல்வீழ்ந்து
    தாக்கவுயி ரற்று வீழ்ந்த
உருவையுற்றுப் பார்க்கவென்ற னொருசேயென்
    றறிந்துநெஞ்ச முருகி னேனே.