பக்கம் எண் :

257

 அதி. 45--பன்னெறி
    தன்னைத்தானறிதல்
 
 

        பகைவன் சொல்லால் திருந்தும் பண்பு

524
தன்னைத் தன்குணத் தன்மையைத் தேரவே
உன்னு கின்றவ னோங்கிய நட்பினோர்
நன்ன யச்சொல்நம் பாமல்நள் ளார்தினம்
பன்னு மாற்றங்கள் நம்பிற் பயனரோ.
 ஒருவன் தன்னுடைய மெய்யான நிலையையும் பண்பையும் ஆய்ந்துணர நினைத்தால், அவன் நண்பர் சொல்வதை நம்பாமல் பகைவர் சொல்லுவதை நம்புதல் வேண்டும். அப்பொழுதுதான் பயனடையலாம்.
 குணம்-பண்பு. உன்னல்-நினைத்தல். நள்ளார்-பகைவர்.
 

1

 பெரியோரடக்கம்
 என்றும் பெரியோர் பணிந்தே சிறப்பர்
525
தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர்
காமரம் வளைதல்போற் கலையு ணர்ந்திடும்
தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும்
பாமர ரெவரையும் பணிந்தி டார்களே.
 தேன் நிறைந்த சுவைமிக்க பலவாய் அடர்ந்துஅமைந்துள்ள சோலைமரங்கள் தாமாகவே வளையும் தன்மைபோல் எல்லாக் கலையும் கற்றுணர்ந்த நல்மனச் சான்றோர் யாவரையும் தொழுவர். அறிவில்லாத் தாழ்நிலையுடையோர் எவரையும் பணியார்.
 செறிந்து-அடர்ந்து. கா-சோலை. தூ-நன்மை. பாமரர்-அறிவிலார்.
 

2

 இதுவுமது
 ஒளிமணி கடலின் ஆழத் துறையும்
526
குலமணி வெளியு றாதாழ்
    குரவையூ டொளித் திருக்குஞ்
சலமிசை யெவருங் காணச்
    சஞ்சரித் திடுந்து ரும்பு
 

நீ.- 17