பக்கம் எண் :

261

  பன்னெறி
 
  கைம்மாறு வேண்டாக் கடப்பாடுள்ள கரிய பெரிய மழை உயிர்களுக்குத் தீங்கு பயப்பதாகிய இடியையும் மின்னலையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு, நன்மை பயப்பதாகிய தண்ணீரையே தருகின்றது. அதுபோன்று நல்லவர்களும் கண்டதும் கேட்டதும் அவ்வாறே கூறிவிடாது, பிறருக்குத் துன்பந்தரும் வன்சொல் நீக்கி நன்மைதரும் இன்சொல்லையே சொல்லுவர்.
  உரும்-இடி. மின்-மின்னல். உதகம்-தண்ணீர். பருவரல்-துன்பம். வசனம்-சொல்.
 

8

  பொழுதறிந்து புகறல்
  கொள்வன கொண்டு கூறுவர் பொழுதறிந்து
532
நதிமுதற் புகுவ தெல்லா
   நன்ககட் டிடைய டக்கும்
அதிர்கட லெனவு மீயா
   ரருத்தமஞ் சிகையே போலும்
வதிசெவி நுழைவ தெல்லா
   மனத்தினு ளடக்கித் தக்க
ததியறிந் துரைப்ப தன்றிச்
   சகலர்க்கு முரையார் மிக்கோர்
  கடல் யாறு முதலியவற்றின் வழியாக வரும் நீர்களை எல்லாம் தன் அகத்தே அடக்கிவைத்துக்கொள்வது போலவும், ஈயாதவர்களுடைய பணப்பெட்டி போலவும் செவிவழியாக நுழைவதை மனத்தகத்து அடக்கி வைத்துத் தக்க நேரம் தெரிந்து பெரியோர் சொல்வது அல்லாமல் எக்காலத்தும் எவர்க்கும் வீணாக எடுத்துரைக்கமாட்டார்.
  நதி-யாறு. அகடு-வயிறு; நடுஇடம். அருத்தம்-பணம். மஞ்சிகை-பெட்டி. வதி-வழி. ததி-தக்கநேரம். சகலர்க்கும்-எல்லார்க்கும். மிக்கோர்-பெரியோர்.
 

9

  அகநிறைவு
  ஆண்டவன் அருளியது பெரிதென மகிழ்க
533
பறவையும் விலங்குந் தீனி
   பசித்தபின் தேடும் நாளைக்
குறையெனுங் கவலை யில்லை
   யுணவின்றி யிறந்த தில்லை