பக்கம் எண் :

275

  தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
 
தேயுமே லெழுந்து நிற்கிற் செகமுய்யா தெனவத் தீயை
வேயும்பல் பொருட்குள் வைத்து வேட்டவாறளிப்போன் யாரோ.
  காற்று கடுமையாக வீசினால் உலகத்தோடு உயிர்கள் எல்லாம் அழிவுபாடு எய்துமென்று அக் காற்றை மெல்லென வீசச் செய்தும், தீ மேலோங்கி நிற்குமானாலும் உலகம் அழிந்துபடும்; அங்ஙனம் தீ மேலோங்கவொட்டாது எல்லாப் பொருள்களிலும் அடங்கி நிற்குமாறு செய்து வேண்டும்போது வெளிப்படத்தந்தும் உதவுகின்றவன் யாவன்? அவனே கடவுளாவன்.
  வாயு-காற்று. வல்விசை-கடுமை. தேயு-தீ. செகம்-உலகம். வேட்டவாறு-வேண்டிய அளவு. அளிப்போன்-உதவுவோன்.
 

15

  மனத்துக்கு வரம்பில் வலி வகுத்தோன் கடவுள்
558
ககனமண் சராச ரங்கள் கலைகளுன் னுள்ள டக்கிப்
பகரொரு நொடிக்கு ளண்டப் பரப்பெலா முலாவித் துன்பஞ்
சுகமற மறமோர்ந் தாவி தூங்கினுந் தூங்கா தோங்கி
அகலுறு முன்னைச் செய்தோ னவன்கொன்மற் றெவன் கொனெஞ்சே.
  மனமே! விண்ணும், மண்ணும், இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களும், எல்லையில்லாத கலைகளும் உன்னகத்தடங்க நொடியளவுக்குள் பலகோடி அண்டங்களைச் சுற்றித் துன்பம், இன்பம், புண்ணியம், பாவம் இவற்றை ஆய்ந்து, உயிர் உறங்கினும் நீ உறங்காது எல்லா இடங்களையும் கடந்து வரும் ஆற்றலை உனக்குத் தந்தவன் யாவன்? அவனே கடவுள்.
  சரம்-இயங்குதிணைப் பொருள். அசரம்-நிலைத்திணைப் பொருள். அறம்-புண்ணியம். மறம்-பாவம். அகலுறல்-கடத்தல்.
 

16

  மயிர்தோல் வலுவாய் வகுத்தோன் கடவுள்
559
அறிவிலா விலங்கு போர்வை
    யகஞ்செய வறியா தென்னச்
செறிமயிர் பெருந்தோல் செய்து
    சீதவுட் டணநோய் தீர்த்தான்