| | நீதி நூல் |
| | அகலா அறுகுணம் அமைந்தோன் கடவுள் |
| 563 | தனவயத் தாதன் மூலந் தானின்மை சடல மின்மை இனநல மெல்லாங் கோட லெங்கணும் நிறைந்தி ருத்தல் வனமுறு பொருள்யா விற்கும் வாய்ந்தகா ரணனே யாதல் எனவறு குணத்தோ னெங்கும் இயலருள் மணத்தோ னெஞ்சே. |
|
| | மனமே! ழுவினையின் நீங்கி விளங்கியழு அறிவினால் தன்வயமுடையவனாவன்; தானே எல்லாவற்றிற்கும் காரணனன்றித் தனக்கோர் காரணனை இல்லாதவன்; தோற்றக்கேடு இல்லாத அருளே திருவுருவாய் ஆண்டாண்டு அடியவர்கட்கு வேண்டுவன அருளலால் மாயாவுருவினை ஏயாமாண்பினன்; அனைத்து நலமும் தினைத்துணையுங் குன்றாது அமையப் பெற்றவன்; எள்ளில் எண்ணெய்போல் எங்கும் பரம்பியுள்ளவன்; அழகுள்ள பொருள்கள் யாவற்றிற்கும் அவ்வழகிற்குக் காரணமானவன் என்னும் வியத்தகு பண்புகள் ஆறும் உடையவன். எங்கும் எல்லாவற்றையும் இயக்கும் திருவருளை மணந்த வரையா வாழ்வருள் வள்ளல். |
| | தனவயம்-பிறர்க்கடிமையின்றித் தானே முதன்மையாயிருத்தல். மூலம்-காரணம். சடலம்-உடல்; திருவுரு. வனம்-அழகு. |
| | 21 |
| | பெண்ணும் பொன்னும்போற் கடவுளைப் பேணாதது என்னே? |
| 564 | மாதரை விழைந்தோ னென்றும் மாதரை நினைப்பன் பொன்மீ தாதர முளோனப் பொன்னை யனுதின மோர்வன் ஈசன் பாதமீ தன்பு ளேமற் பகலிர வினுமோ வாது நாதனை யுன்னேங் கொன்னே நாள்கழித் திடலென் னெஞ்சே. |
|