| | அதி. 5--ஞானாசிரியன் தன்மை |
| | மேலோர் நடப்பதே ஏனோர்க்கும் விதியாம் |
| 595 | மகவின் கரம்பற்றி முன்றா னடந்து வளமேவு நடைகாட்டி மகிழன்னை போலுந் தகமுன்பு தாமாடி நடனம் பயிற்றுந் தகையோர்கள் போலுஞ் சகத்தோர் செவிக்கட் புகவேநல் வழியோது புரையற்ற புனிதர் பொறைசீல மன்பீகை புகழ்வாய்மை விரதம் பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கு மவரோர் பதியாகி விதியாகி மதியோது வாரால். |
|
| | பிள்ளையை நடைபயிற்றுந் தாய், அப்பிள்ளையின் கையைப் பிடித்து நடக்கச்செய்து தானும் உடன்நடந்து மகிழ்வள். கூத்துப் பயிற்றும் கூத்தர், ஆடுவாரை ஆடச்செய்து தாமும் உடன் ஆடிக்காட்டுவர். அவைபோல், மெய்யுணர்வு கைவரப்பெற்ற குற்றமில் மேலோர், பேரன்புவாய்ந்த மாணவராம் அடியவர் குழாங்களுக்குச் செவியறிவுறூஉவாம் (உபதேசம்) உறுதிமொழி மொழிந்து, தாம் பொறை, சீலம், அன்பு, ஈகை, வாய்மை, நோன்பு முதலிய நற்பண்புகள் யாவற்றுக்கும் ஓர் `உறைவிடழு மாய் அவற்றிற்கு அன்னார் நடைமுறையே மாறா ஊழாய் அறிவு கொளுத்துவர். |
| | மகவு-பிள்ளை. கரம்-கை. புரையற்ற-குற்றமற்ற. புனிதர்-மேலோர். பதி-உறைவிடம். விதி-ஊழ். மதி-அறிவு. |
| | 1 |
| | எல்லார்க்கும் இனியராய் இயல்பவர் மேலோர் |
| 596 | அயலார் மதத்தைக் குணத்தைப் பழிக்கா ரறமீது மறமீ தெனச்சொல்வர் பொதுவாச் சுயவூதி யந்தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்க ளீடேறு மாறென்று முயல்வார் இயல்செல்வர் மிடியாளர் நல்லார்க ளல்லாரென் பேதமோ ராரியா வர்க்கு மினியார் பயனொன்று விழைவோரை மறைதன்னி லேலார் பழியற்ற மொழிபெற்ற வழியுற்ற மேலோர். |
|