| உடன்பிறந்தாரியல்பு |
| வாணி-கலைமகள்; நாமகள். உமை-மலைமகள். கமலை-அலைமகள்; திருமகள். மாதர்-பெண்பாலார். காணி-உறைவிடம். மடந்தையர்-பெண்பாலார். கதிரோன்-ஞாயிறு. பார்-மண். சேண்-விண். நிகரும்-ஒக்கும். தீட்ட-எழுத. நிதியம்-செல்வம். புருடர்-ஆண்பாலார். |
| 3 |
| அதி. 10--உடன்பிறந்தாரியல்பு |
| முன்பின் பிறந்தார் தந்தைதாய் மக்களாமுன் |
608 | முன்னவன் சிறுபிதா முன்னை யன்னையாம் பின்னவ னேயனாம் பின்னை புத்திரி பன்னருஞ் சோதரர் பன்னி மார்களீங் குன்னருஞ் சோதரம் போலு முள்ளமே. |
|
| மனமே! நம் முன்பிறந்தோனாகிய தமையன் சிறிய தந்தையாவன். தமக்கை சிறிய தாயாவள். பின்பிறந்தோனாகிய தம்பி மகனாவன். தங்கை மகளாவள். சொல்லுதற்கரிய உடன்பிறந்தாரின் மனைவிமார் உடன்பிறந்தாரே யொக்கும். இங்ஙனம் கொண்டு ஒழுகுவதே வீடும் நாடும் மேன்மையுற்று விளங்கி நலம் பல பயக்கும் நன்னெறியாகும். |
| முன்னவன்-தமையன். பிதா-தந்தை. பின்னவன்-தம்பி. நேயன்-காதலன்; மகன். பின்னை-தங்கை. புத்திரி-மகள். பன்னல்-சொல்லுதல். சோதரர்-உடன்பிறந்தார். பன்னிமார்-மனைவிமார். |
| 1 |
| வேறு |
| கிளைஇலைபோல் உடன்பிறந்தார் கெழுமுதல் பண்பே |
609 | கொம்பருள் ளுலர்ந்திடக் கூடவாடு மிலைகளும் பம்பியக்கொம் போங்கிடப் பன்னமுஞ் செழிக்குமால் தம்பியண்ண னென்னவே சார்ந்துளோர்த மின்பமும் வெம்புதுன்பு மொன்றென மேவிவாழ்தன் மேன்மையால். |
|
| மரக்கிளை ஈரம் புலர்ந்து உள்உணங்க அதன்மேலுள்ள இலை முதலியவும் வாடும். அது செழித்திருக்க அவைகளும் செழித் |
| நீ.-20 |