| நீதிநூல் |
| வேறு |
| அடங்காக் குடிகள் வளங்குன்றி அழியும் |
49 | நதியினு முயர்பணை நந்துங் காருலாங் கதியினு முயர்வரைத் தருக்கள் காயுமால் பதியினு முயர்தடம் காப்பைஞ் ஞீலங்கள் விதிசெயல் சிதைந்தக மெலிந்து நையுமே. |
|
| (செங்கோல் மன்னன் இல்லாவிட்டால்) யாற்றினும் மிக்க நீர்வளமுள்ள வயல்களும் கெடும். மேகத்தை ஊடுருவிச் செல்லும் உயர்ந்த மலைமேலுள்ள மரங்களும் வாடும். ஊரினும் சிறந்த குளம் சோலை நீலமலர்கள் வாழ்க்கைமுறைகள் எல்லாம் வளங்குன்றி யழியும். |
| பணை-வயல், நந்தும்-கெடும், தருக்கள்-மரம், தடம்-குளம், கா-சோலை, ஞீலங்கள்-நீலமலர்கள். |
| 3 |
| உடலுக்குத் தலை போலும் உலகினுக் கரசன் |
50 | தரையெனு முடற்கொரு தலைவ னேதலை நரர்பல வுறுப்புக ணலங்கொண் மெய்யது சிரமுறும் பொறிவழிச் செல்லுந் தன்மைபோல் உரவர சனுக்கமைந் தொழுகும் வையமே. |
|
| உலகமாகிய உடலுக்கு மன்னனே தலை; மக்கள் (மெய் வாய் கண் மூக்கு செவி, கை கால் வாய் எருவாய் கருவாய் முதலிய) வுறுப்புக்கள். உடம்பு மூளைவழிச் செல்லும் தன்மைபோல் வலிமையுடைய அரசன் வழி உலகம் நடக்கும். |
| நரர்-மக்கள். உரன்-வலிமை. |
| 4 |
| நயம்செய் மன்னவன் ஞாயிறு போல்வன் |
51 | பானுவெப் புடையவ னெனினும் பானுவே வானில வானெனில் வைய முய்யுமோ கோனருங் கொடியனே யெனினுங் கோனின்றி மானவ ருய்யவோர் வழியு மில்லையே. |
|