பக்கம் எண் :

33

  குடிகளியல்பு
 
  ஞாயிறு வெப்பமுடையவன். ஆனாலும், அவன் வானில் உலாவாவிட்டால் இருளகலாது; ஒளியுண்டாகாது; உயிர்கள் வாழ முடியாது. அதுபோல், மன்னனும் தீயோருக்குக் கொடியனே; அவன் இல்லாவிட்டால் நல்லவர் வாழ வேறு வழியின்று.
  பானு-ஞாயிறு, மானவர்-நல்லவர்.
 

5

  வரிகொளல் மக்களை வாழ்வித் தற்கே
52
படியின்மன் னுயிர்க்கெலாம் பாது செய்கின்ற
நெடியமா சேனையை நெறிசெய் மாந்தரைக்
கடியொடுந் தாங்கவூர்க் காரி யஞ்செயக்
குடியிறை யிறையவன் கொள்ளுங் கொள்கையே..
  மன்னவன் வரிவாங்குவது மக்களைக் காக்கும் படைகளுக்கும் அரசியல் அலுவல்களிலமர்ந்து நெறிமுறைசெய்யும் வேலையாட்களுக்கும், நாடு நகரங்களின் நலம் பெருகச் செய்யும் பணிகட்கும் செலவு செய்தற்கே.
  படி-உலகம். மாந்தர்-வேலையாட்கள்.
 

6

  மன்னனைக் குடிகள் உழைப்பால் காப்பர்
53
கோவரிய சீவன் குடிகளுட லாவார்
சீவன்சும் மாவிருக்கத் தேகமுழைத் தோம்புதல்போற்
பூவலய மீதினில்தம் பூட்சிகளி னாலுழைத்துக்
காவலனைக் காக்கக் கடனாங் குடிகளுக்கே.
  மன்னவன் உயிர்போல்வான்; குடிகள் உடல் போல்வர்; உயிருக்கு உடல் உழைத்துக்கொடுப்பதுபோல் குடிகள் தங்கள் உடலா லுழைத்து, காக்கும் மன்னனைக் காத்தல் கடமை.
  கோ-மன்னன். பூட்சி-உடம்பு. காவலன்-மன்னன்.
 

7

  _____
 

நீ.-3