| அதி. 5. ஞானாசிரியன் பெருமை |
| இறைவனை உணர்த்தி இன்பருள்வோன் ஆசான் |
54 | அகவிரு ளகல ஞான விளக்கினை யருளின் ஏற்றிச் சகலமு நல்குங் கேள்வித் தனத்தினை நல்கி யாதிப் பகவன்தன் சொரூபங் காட்டிப் பவமற மிரண்டுங் காட்டிச் சுகநிலை காட்டுந் தியாகத் தோன்றலை மறவாய் நெஞ்சே.
|
|
| ஞானவள்ளல் மனவிருள் நீங்க மெய்யுணர்வு விளக்கை ஏற்றுவன்; எல்லா நலமும் தரவல்ல கேள்விச்செல்வத்தைத் தருவன்; கடவுளருள் திருவுருவைக் காட்டுவன்; பாவ புண்ணியங்களை உணர்த்துவன். பேரின்பத்து அழுத்துவன். அப்படிச் செய்தருளிய ஞானாசிரியரை நெஞ்சே மறவாதே. |
| அகம்-மனம். தனம்-செல்வம். சொரூபம்-திருவுரு. பவம்-பாவம். தியாகத்தோன்றல்-ஞானவள்ளல். |
| 1 |
| வேறு |
| அழியா ஞான உடம்பளித்தோன் ஆசான் |
55 | கான லெனப்படு காய மிதப்பன் தானவ மேபுவி தங்க அளித்தான் ஈனமில் ஆரியன் என்று மொருங்கா ஞானவு டம்பினை நல்கினன் அன்றோ. |
|
| பொய்யாகத் தோன்றும் உடம்பினை இவ்வுலகில் வீணாகத் தங்க அளித்தான் ஈன்ற தந்தை. ஞானாசிரியன் என்றும் அழியாத உடம்பினை அருளினன். |
| கானல்-நீர்போல் தோன்றும் வெளி. காயம்-உடம்பு. அவம்-வீண். ஆரியன்-ஆசான். ஒருங்கா-அழியா. |
| 2 |
| வேறு |
| ஆசானா லன்றி அறியொணா நூற்பயன் |
56 | நாட்டமின்றி யொளியெப் பயனைநல்கும் மனையில் பூட்டுபொன் திறவுகோ லினையலாது புகுமோ |
|