| நீதிநூல் |
| ஞாயிற்றின் கதிர்கள் அங்கணத்துள் தூயஅல்லாத அழுக்கு நீர் முதலியவற்றில் படியினும் அக்கதிர்கள் கெடுவன அல்ல. அதற்கு மாறாக அந்நீர் முதலியன தூய்மை எய்தும். இவை போன்று, மெய்யுணர்ந்தார் நல்லொழுக்கமில்லாரிடைச் சார்ந்து போதித்தாலும் தாம் தீங்கெய்தார். அவர்களை நல்லொழுக்கத்தில் நிற்கச்செய்வர். |
| பரிதி-ஞாயிறு. அங்கணம்-கலங்கழுவுமிடம். மாசு-அழுக்கு. சரிதம்-ஒழுக்கம். துரிதம்-கேடு. மறைக்கிழவர்-மெய்யுணர்ந்தார். |
| 11 |
| அதி. 6. பொய்க்குருவின் தன்மை |
| அருளில் நெஞ்சத்தான் ஆசான் ஆகான் |
65 | திருடன் பொருட்கா வலனாதலுஞ் செல்வழிக்குக் குருடன் குருடன்றனை யேதுணைக் கொள்ளல்போலும் இருடங் குளமாந்தரை வான்கதி யேற்றவென்னா அருடங்கிய நெஞ்சமி லான்குரு வாயவாறே.. |
|
| பொருளைக் காக்க கள்ளனை வைத்தலும், குருடனுக்கு வழித்துணை குருடனாக அமைதலும் பயன் இல்லாமைபோல், அருள் சேர்ந்த நெஞ்சமில்லாதவன் ஆசானாய் மக்கள் அறியாமையை நீக்க மேற்கொள்வது பயனில்லாததாகும். |
| இருள்-அறியாமை. |
| 1 |
| குற்றமிலான் உரையையே கொள்வர் உலகோர் |
66 | பெருவெம் பிணியாளன் மற்றோர்பிணி பேரும்வண்ணந் திருமந் திரஞ்சொல்வ னென்றோதிடிற் றிண்மையாமோ தருமந் தனைநாட்ட வந்தோன்குறை தானுளானேல் இருமண் டலமீதவன் சொல்லெவ ரேற்பர் மாதோ.. |
|
| தன்நோயைப் போக்கிக்கொள்ள முடியாதவன் பிறர் நோயைப் போக்க மந்திரிப்பேன் என்பது உறுதிதராது. அதுபோன்று, குற்றமுள்ள ஒருவன் நன்மையை உலகுக்குச் சொன்னால் உலகத்தார் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார். |
| இரு மண்டலம்-பெரிய உலகம். |
| 2 |