பக்கம் எண் :

40

 நீதிநூல்
 
 பிறருக்குத் துறவு ஞானம் போதிப்பது. மேலும், துறந்தவர் பொருளைத் தான் கவர்ந்துகொள்ளும் கருத்துக்கு ஏதுவுமாகும்.
 சொன்னம்-தங்கம்; பொன். திருஞானம்-மெய்யுணர்வு.
 

5

 வேறு
 சிறுவரும் தன்உளமும் சிரிக்கும் கொடியனை
70
வாயில் தேனுந்தன் வாலிற் கொடுக்குஞ்சேர்
ஈயின் வாயினி லிங்கிதச் சொல்லொடுந்
தீய செய்கையு ளானைத் தினஞ்சிறு
சேயும் எள்ளுந்தன் சிந்தையும் எள்ளுமே.
 தேனுங் கொடுக்கும் முன் பின் அமைந்த தேன் ஈயைப் போன்று வாயில் இனிய சொல்லும் கையில் கொடுஞ்செயலும் உள்ளவனை நாளும் சிறுவர்களும் இகழ்வர். அவனுடைய உள்ளமும் சிரிக்கும்.
 

6

 இம்மைப்பற் றில்லானே ஆசானுக் கேற்றவன்
71
இகத்தின் வாழ்வினில் இச்சைய றான்றனை
சகத்தி னிற்குரு சாமியென் றோதுதல்
சுகத்தை நீங்கித் துயரஞ் செறிநரர்
அகத்தை வீடென்(று) அறைதல் சிவணுமே..
 

இவ்வுலக வாழ்வில் விருப்ப மறாதவனை ஆசிரியனாகக் கொள்ளுதல் துன்பம் நிறைந்தவர் வீட்டைக் கடவுளின்ப நிலையமாகக் கொள்ளுதல் ஒக்கும்.

 அகம்-குடியிருக்கும் வீடு. வீடு-கடவுளின்பம். சிவணுதல்-பொருந்துதல்; ஒக்கும்.
 

7

  உணர்ந்து நெறிபிழைத்தோர் உய்யார் ஒருநாளும்
72
ஆதி தேவன் அறிவில் லவர் செயுங்
கோதி னைக்கமை கொண்டு பொறுக்கினும்
நீதி நூலை யுணர்ந்து நெறிதவிர்
வேதி யர்க்கு விமோசன மில்லையே.