| | பொய்க்குருவின் தன்மை |
| | முதல்பெருங்கடவுள் அறிவில்லாத மக்கள் செய்யும் குற்றங்களைப் பொறுத்து மன்னித்தாலும் கற்றுணர்ந்தும் முறைதவறிய அறிவுடையவரை ஆண்டவன் மன்னிக்க மாட்டான். |
| | கோது-குற்றம். கமை-பொறுமை. வேதியர்-அறிவுடையர். |
| | 8 |
| | அறிவில் ஆசான் ஆட்டுத்தோல் புலியே |
| 73 | ஒருமை யாய்த்தன் உதர நிமித்தமே தரும வேடந் தரிக்குதல் வெம்புலி புருவை தன்னைப் புசிக்கப் புருவையின் சருமம் பூண்டங்குச் சார்தல் நிகர்க்குமே. |
|
| | தனித்துத் தன் வயிறு வளர்த்தற்பொருட்டு ஆசிரியக் கோலம் பூணுதல், புலி ஆட்டை உண்ணுதற் பொருட்டு ஆட்டுத் தோலைப் போர்த்தலோடு ஒக்கும். |
| | ஒருமை-தனிமை. உதரம்-வயிறு. புருவை-ஆடு. சருமம்-தோல். நிகர்க்கும்-ஒக்கும். |
| | 9 |
| | _____ |