| தாய்தந்தையரை வணங்கல் |
| ஒப்பனை யுளதோ வேலை யுலகிற்கட் புலனில் தோன்றுஞ் செப்பருந் தெய்வம் அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே. |
|
| எல்லா உலகங்களையும் படைத்துக் காக்கும் ஆண்டவனைத் தொழவேண்டுமானால் அம்மையே அப்பா என்று ஒப்புரைத்துத் தொழுவோம். கண்கண்ட தெய்வமாகக் காணப்படும் தாய் தந்தையருக்கு எங்கும் ஒப்பில்லை; அவர்கள் திருவடியை நெஞ்சே போற்று. |
| புவி-உலகம். புரத்தல்-காத்தல். வேலை-கடல். புலன்-பொறியுணர்வு. |
| 3 |
| தாய் தந்தையரைப் போற்றாரைத் தண்டிப்பான் ஆண்டவன் |
77 | வைத்தவர் உளமு வப்ப மலர்நிழல் கனியீ யாத அத்தருத் தன்னை வெட்டி அழலிடு மாபோல் ஈன்று கைத்தலத் தேந்திக் காத்த கதற்றாய் பிதாவை யோம்பாப் பித்தரை அத்தன் கொன்று பெருநர கழற்சேர்ப் பானே.. |
|
| வைத்து வளர்த்தவர்க்குப் பூ, நிழல், பழம் நல்காத மரத்தை வெட்டி எரிப்பது போன்று, தாய் தந்தையரை வணங்காத அறிவிலாரை ஆண்டவன் இருள் உலகில் தள்ளி வருத்துவன். |
| தரு-மரம். அழல்-தீ. இருள் உலகு-நரகம். |
| 4 |
| ஈன்றார் வன்சொல் இனியநற் பாகே |
78 | ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட் கான்ற மூன்றுல கமுமொப் பாமோ மூப்பினால் இளைப்பால் அன்னார் கான்றவன் சொற்கள் கன்னல் கான்றவன் பாகெ னக்கொண்டு ஊன்றுகோ லென்னத் தாங்கி ஊழியஞ் செய்யாய் நெஞ்சே. |
|
| பெற்றவர்கள் பிள்ளைகள் பொருட்டு அளவிலாத் துன்பம் அடைந்தனர். அத்துன்பத்திற்கு ஈடாக மூன்று உலகமும் கொடுப்பினும் போதா. அவர்கள் தங்கள் மூப்பினாலும் சோர்வினாலும் கடுஞ் சொற்கள் சொல்ல நேர்ந்தால், அச்சொற்களை வெல்லப்பாகென்று கொண்டு அவர்களைப் போற்றிவரல் மக்கட்குக் கடன். |
| கன்னல்-கரும்பு. பாகு-வெல்லப்பாகு. |
| 5 |