| மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் |
| செல்வமாக வளர்த்தல் தங்கள் உயிரைக்கொள்ளும் கூற்றுவனை வளர்ப்பதாகும். |
| மால்-அன்பு. மருவல்-கூடல். மாசு-குற்றம். பாலன்-பிள்ளை. தாலம்-உலகம். காலன்-கூற்றுவன். |
| 3 |
| சேயர்முன் தீமைசெய் பெற்றோர் தீப்பகை |
87 | தீதுநன் றறிகிலாச் சேயரென் செய்வார் கோதற அவரைநன் னெறியிற் கூட்டிடாது ஏதங்க ளவர்முன்செய் திழிவைக் கற்பிக்குந் தாதைதாய் புதல்வர்க்குச் சத்து ருக்களே. |
|
| தீமையும் நன்மையும் தாமாகத் தெரிந்துகொள்ளும் தன்மையில்லாத மக்களைத் தாய்தந்தையர் நல்வழிப்படுத்த வேண்டும். அப்படிச்செய்யாமல் அவர்கள் முன் குற்றமானவற்றைச் செய்து இழிவையே கற்பித்தல் பகைவரின் தீச்செயலாகும். |
| சேயர்-மக்கள். கோது-குற்றம். புதல்வர்-மக்கள். |
| 4 |
| படிப்பே பிள்ளைகட்குப் பயன்பெரி தளிக்கும் |
88 | சுகமுறு வாழ்வில வெனினுந் தோன்றற்குச் சகமகிழ் கலையறந் தனைப்ப யிற்றுதல் அகநினைந் ததுதரும் அரத னந்தனை இகபரம் இரண்டினை யீத லொக்கும். |
|
| செல்வவளம் குறைவாயிருப்பினும் பிள்ளைகட்கு நன்மையும் மகிழ்வும் தரத்தக்க கல்வியும் நற்பண்பும் பழகச் செய்தல், கருதியது கைகூடச் செய்யும் மணியினை-இம்மை, மறுமை இன்பினை ஈவதொக்கும். |
| சுகம்-செல்வம். சுகம்-நன்மை. தோன்றல்-மக்கள். |
| 5 |
| கல்வியில் செல்வம் பிள்ளையுயிர்க் காலன் |
89 | கலைபயிற் றாதுகா தலர்க்கு மாநிதி நிலையென அளிக்குதல் நெறியில் பித்தர்க்குக் கொலைசெய்வா ளீவதுங் குழவி தன்னைமா மலையினோ ரத்துவைப் பதுவும் மானுமே. |
|