| பிள்ளைகளுக்கு விழுச்செல்வமாங் கல்வியைக் கொடுக்காது பெரும்பொருள் நிலையெனக் கருதிக் கொடுப்பது, முறைதெரியாத கிருக்கருக்குக் கொலைக்கருவியாகிய வாளைக் கொடுப்பதும், பச்சிளங் குழந்தையைப் பெரிய மலைமேல் ஓரத்தில் வைப்பதும் போன்றதாம். |
| காதலர்-பிள்ளைகள். நெறி-முறை. மா-பெரிய. மானும்-போன்றதாம். |
| 6 |
| தந்தைதாய் துன்பத்தைத் தகையும் பிள்ளைகள் |
90 | பயிர்களை யெடுத்திடப் பலன ளித்தல்போற் செயிரினைக் கடிந்துநற் செயல்வி யந்தருந் தயையொடுஞ் சேயினை வளர்க்குந் தந்தைதாய் துயருறா வண்ணமத் தோன்றல் காக்குமே. |
|
| பயிர் களைஎடுத்ததும் செழித்து வளர்ந்து பெரும்பயன் தரும். அதுபோல் பேரன்போடு வளர்க்கும் தந்தைதாய் பிள்ளைகளைக் குற்றத்தினின்றும் விலக்கி நல்ல வழியில் செலுத்துவர். அவர்கள், பெற்றோர் துன்புறாவண்ணம் காப்பர். |
| பலன்-பயன். செயிர்-குற்றம். வியந்தரும்-செலு. தயை-பேரன்பு. தோன்றல்-பிள்ளை. தகையும்-தடுக்கும். |
| 7 |
| கல்வியே முறையுயர் வீடு காட்டுமால் |
91 | நிதிசெல வாய்க்கெடு நீசர் வவ்வுவர் மதியினை மயக்கிவெம் மறம்வி ளைத்திடுங் கொதியழல் நரகிடுங் குணமுங் கல்வியும் விதிதரும் பதிதரும் வீடு நல்குமே. |
|
| கல்லாதவன் செல்வம் வீண் செலவாகும்; தீயவர் கொள்வர்; அறிவைக் கெடுக்கும்; பாவத்தைப் பெருக்கும்; இறுதியில் துன்பவுலகத்து ஆழ்த்தும்; கல்வி நல்லகுணம் தரும்; முறை தரும்; உயர்ந்த நிலை தரும்; கெடாக் கடவுளின்பமும் தரும். |
| நிதி-செல்வம். மறம்-பாவம். பதி-நிலை. |
| 8 |
| கல்லாமை கடிவாளமில் குதிரைஏறல் ஒக்கும் |
92 | புவிநடை கடவுண்மெய்ப் போதம் அன்பறஞ் செவியினோ தாதொரு சேயைப் பார்விடல் |
|