| உரைக்கருங் குன்றம் ஒருபதி னெட்டும் நத்த மெழுநூற் றறுபத் தாறும் |
105 | உன்னும் படிநன் குளகுளக் காடும் முன்னு மாயிரத்து முந்நூற்று முப்பது தேவா லயங்கள் சிறக்குநூற் றெட்டும் இரும்பிர மாலய மிருபத் தெட்டுங் குறையறக் கொண்டவக் கோனாடு பின்னர் |
110 | அறைதரு புனல்வெள் ளாற்றின் தென்பால் உறைதென் கோனா டொலியூர்க் கூற்றந் திரைகரை எறியுமத் திருநதி வடபால் ஒளிர்வட கோனா டுறையூர்க் கூற்றம் எனப்பெயர் பெற்றுநன் றியங்குங் காலம் |
115 | வண்மையவ் வேளாண் மக்கள்மிகப் பெருகி வடகோ னாட்டில் வண்குளத் தூரில் பெரிதிருத் தலின்மிகப் பெரியகோ னாடென் றொருபெயர் பெற்றவவ் வென்குளத் தூரில் கொங்கு ராயர் கோத்திர மதனில் |
120 | வந்தவ தரித்த செந்தமிழ்க் குரிசில் இரும்புவி யேத்தும் இளையான் குடியில் அருமுளை வாரி யன்னம் படைத்த குருமணி மாறனங் குலமெனுங் கொண்டல் அவிர்விரை யாச்சிலை யாண்டார் திருமலை |
125 | உடையான் கருவரா லுகளரி யாற்றான் குளிர்புனல் வயறொறுங் குலவுகோ னாட்டின் அமரரும் புகழ்வே ளாண்குளத் தூரான் உச்சைச் சிரவம் உறழும் பரியான் அயிரா வதநிக ராயதிண் களிற்றான் |
130 | குளிர்மதுப் பொழியங் குவளைமா லிகையான் உலக மூன்றும் உணர்கொடை முரசான் |