பக்கம் எண் :

6

  வெற்றிக் கொடியெனு மேழிக் கொடியான்
அடங்கலர் நடுங்க அடக்கும் ஆணையான்
அளவில்பன் னூலும் அரில்தப வுணர்ந்தோன்
135 பண்பெலாம் ஓருருப் படைத்தெனப் பொலிவோன்
ழுஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிறுழு வெனப் பெரியோர்
உரைத்தவாக் கியத்திற் கொருசான் றாகப்
பயன்படு செல்வம் படைத்துமகிழ் பூமான்
140 அடைந்தோர் வெங்கலி யடர்க்குந் திறலோன்
பிறர்மனை நோக்காப் பேரறி வாளன்
கற்றோர் நட்புக் கழலாக் கனவான்
நானிலம் உவப்ப நடத்து நீதியான்
அரும்பொருள் செறியும் ஐந்திணைக் கோவை
145 நம்பாற் கேட்ட நகுபுகழ் பெரியோன்
வலந்தரு நதிக்குல வள்ளல்
நவத்தரு வேத நாயக மாலே.
   
விருத்தம்

தெரியவிரு வேறுலகத் தியற்கைதிரு வேறு
   தெள்ளியரா தலும்வேறென் றுள்ளபடி யுரைத்த
அரியபுகழ் வள்ளுவர்தம் வார்த்தையினை மறுத்தான்
   அரசர்கா ரியநடவும் அதிகாரத் தொடுநூல்
அரியவென வுணர்ந்துபெருஞ் செல்வமுங்கல் வியுமிக்
   கொருங்கடைந்து பொருட்கொடையில் ஒப்பிலா னாகி
விரியவனி மகிழவொரு நீதிநூ லியற்றி
   விளக்கியசீர் வேதநா யகக்குரிசில் தானே.